Actress Hansika Motwani granted divorce from Sohael Khaturiya : நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹல் கதூரியா தம்பதி மும்பையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர்.
நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகர் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி, ரவி மோகனுடன் இணைந்து நடித்த எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
வேலாயுதம், சிங்கம், பிரியாணி,ஒரு கல் ஒரு கண்னாடி, வாலு முதலான படங்களில் நடித்துள்ளார்.
இதன்மூலம் தமிழ்த் திரையுலகில் விஜய்,சூர்யா, கார்த்தி,உதயநிதி, சிம்பு முதலான கதாநாயகர்களுடனும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே உள்ளிட்ட திரைப்படத்திலும் நடிந்திருந்தார்.
2022-ல் காதல் திருமணம்
இதன் மூலம் புகழின் உச்சியில் இருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சோஹல் கதூரியா என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதை கைவிடாமல் இருந்தார். எனினும், திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்றே சொல்லலாம்.
மும்பையில் புதிய வீடு
திருமணத்திற்கு பிறகு மும்பையில் புதிதாக வாங்கிய இல்லத்தில் ஹன்சிகாவும் சோஹல் கதூரியாவும் வாழ்ந்து வந்தனர்.
நாத்தனார் தொடுத்த வழக்கு
இந்நிலையில் கடந்த ஆண்டு ஹன்சிகாவின் நாத்தனார், ஹன்சிகா மீதும் அவரது தாயின் மீது வழக்கு பதிந்திருந்தார். அந்த வழக்கில் ஹன்சிகாவும் அவரது தாயும் தன்னை கொடுமை படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கணவருடன் பிரிவு
நாத்தனாரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஹன்சிகா கணவர் சோஹல் கதூரியாவிடன் இருந்து பிரிந்து பல மாதங்களாக தன் தாயின் வீட்டில் இருந்ததாக தகவல் வெளியாகின.
இதைத்தொடர்ந்து இருவரின் விருப்பத்தின் பேரில், பிரிவதாக முடிவெடுத்த நிலையில், விவாகரத்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விவாகரத்து பெற்றார் ஹன்சிகா
தற்போது, மும்பை பாண்ட்ரா குடும்ப நல நீதிமன்றம் ஹன்சிகாவிற்கும், சோஹல் கதூரியாவிற்கும் விவாகரத்து வழங்குவதாக தெரிவித்தது.
ஜீவனாம்சத்தை மறுத்த ஹன்சிகா
ஹன்சிகா கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில், ஜீவனாம்சமாக சோஹல் கதூரியாவிடம் இருந்து எதுவும் வேண்டாம் எனக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் புலம்பல்
சினிமாவில் திரைப்பிரபலங்கள் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்வதும், அதன்பின் ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்து செய்வது வழக்கமாகி விட்டது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.