Cinema Without Cameras: Jio Studios' 'Krishna' — A New Milestone for Indian Cinema Powered by AI Technology! source:google
சினிமா

கேமரா இல்லாத சினிமா: ஜியோ ஸ்டுடியோஸின் 'கிருஷ்ணா' : AI தொழில்நுட்பத்தில் இந்தியத் திரையுலகின் புதிய மைல்கல்!

Cinema Without Cameras: ஜியோவின் 'கிருஷ்ணா' - இந்தியாவின் முதல் AI-Native திரைப்படம்!

S Kavitha

Cinema Without Cameras: Jio Studios' 'Krishna' — A New Milestone for Indian Cinema Powered by AI Technology!

இந்திய சினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சி

இந்தியத் திரையுலகின் எல்லைகளைப் புதிய தொழில்நுட்பங்கள் எப்போதும் விரிவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

ஜியோ ஸ்டுடியோஸின் ‘கிருஷ்ணா’

அந்த வகையில், ஜியோ ஸ்டுடியோஸ் இன்று வெளியிட்டுள்ள ‘கிருஷ்ணா’ திரைப்படத்தின் டீசர், ஒட்டுமொத்த இந்தியச் சினிமாவையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய சினிமாவில் முதல் ‘ஏஐ-நேட்டிவ்’

இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, இந்தியாவின் முதல் ‘ஏஐ-நேட்டிவ்’ (AI-Native) சினிமா என்ற வரலாற்றுச் சாதனையை இது நிகழ்த்தியுள்ளது.

ஏஐ-நேட்டிவ்: திரையில் ஒரு மாயாஜாலம்

பொதுவாக ஒரு திரைப்படம் படமாக்கப்பட்ட பிறகு, அதில் மெருகூட்டலுக்காக சிஜிஐ அல்லது விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். ஆனால், ‘ஏஐ-நேட்டிவ்’ என்பது முற்றிலும் மாறுபட்டது.

செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைப்பு

இப்படத்தில் திரைக்கதை உருவாக்கம் முதல், கதாபாத்திரங்களின் நுணுக்கமான அசைவுகள், லைட்டிங் மற்றும் பின்னணிக் காட்சிகள் வரை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மூலமே வடிவமைக்கப்பட்டுள்ளன.

Jio மற்றும் Microsoft Azure

இதற்காக ஜியோ ஸ்டுடியோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அஸூர் (Microsoft Azure) கிளவுட் கம்ப்யூட்டிங் தளத்தைப் பயன்படுத்தியுள்ளது.

அஸூர் கிளவுட்: தொழில்நுட்பப் பின்புலம்

மைக்ரோசாப்ட் அஸூரின் அபரிமிதமான தரவுச் செயலாக்கத் திறன், இவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தைச் சாத்தியமாக்கியுள்ளது.

செட் மற்றும் வெளிநாட்டு பயணம்

இதன் மூலம் படப்பிடிப்புக்காகப் பிரம்மாண்ட செட்கள் அமைக்கவோ, வெளிநாடுகளுக்குச் செல்லவோ அவசியமில்லை.

Virtual World -ஐ தத்ரூபமாக உருவாக்க முடியும்

ஒரு மெய்நிகர் உலகத்தையே கணினியின் உதவியுடன் தத்ரூபமாக உருவாக்க முடியும் என்பதை ‘கிருஷ்ணா’ நிரூபித்துள்ளது.

கால விரயம் குறையும்

இது தயாரிப்புச் செலவை மிச்சப்படுத்துவதோடு, காலவிரயத்தையும் பெருமளவு குறைக்கிறது.

கண்களைக் கவரும் டீசர்

இன்று வெளியான டீசரில், பகவான் கிருஷ்ணரின் உருவமும், பழமையான துவாரகை நகரமும் காட்டப்பட்ட விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கேமரா பயன்பாடு இல்லாமை

கேமராக்கள் பயன்படுத்தப்படாமல், கணினியின் கற்பனையில் உருவான இந்தக் காட்சிகள் நிஜ உலகை மிஞ்சும் வகையில் உள்ளன.

கதாபாத்திரங்களின் முகபாவனைகள் ஒரு உயிருள்ள மனிதனின் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்கின்றன.

இந்திய சினிமாவின் எதிர்காலம்

இந்தத் தொழில்நுட்பம் கலைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், இது படைப்பாளர்களின் கற்பனைத் திறனுக்கு எல்லையற்ற வாய்ப்புகளை வழங்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய சினிமாவை முன்னெடுத்து செல்லும் திறன்

இந்தியச் சினிமாவை உலக அரங்கில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போகும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக 'கிருஷ்ணா' திரைப்படம் பார்க்கப்படுகிறது.

=====