இந்திய கடற்படைக்கு அர்ப்பணிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிதாமன் என்ற நீர்முழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் அரிதாமன் என்ற நீர்மூழ்கி கப்பலும் அதனுடன் ,ஐஎன்எஸ் தாராகிரி போர்க் கப்பலும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது
அரிதாமன் நீர்முழ்கி கப்பல் : சிறப்பு
இந்த அரிதாமன் நீர்மூழ்கி கப்பல் 7,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தும் இந்த நீர்மூழ்கி கப்பலில் 90 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2 மடங்கு சக்தி வாய்ந்த கப்பல்
இந்திய கடற்படையில் அர்ப்பணிக்கப்பட்ட இந்த கப்பல் தண்ணீருக்குள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இது உள்ளது .
இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹன்ட் மற்றும் ஐஎன்எஸ் அரிகட் நீர்மூழ்கி கப்பல்களை விட, இந்த கப்பல் 2 மடங்கு சக்தி வாய்ந்தது.
இதில் ஏவுகணைகள் ஏவுவதற்கு 8 ட்யூப்கள் சிறப்பும் இடம் பெற்றுள்ளது
1,500 கிலோ மீட்டர் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது
இந்த நீர்முழ்கி கப்பலில் உள்ள அணு ஏவுகணை கடலுக்கடியிலிருந்து வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் படைத்தது.
அரிதாமன் கப்பலில் 24, ‘சகாரிகா கே-15’ ஏவுகணைகள் உள்ளன. இந்த நீர்முழ்கி கப்பல் 750 கிலோ மீட்டர் முதல் 1,500 கிலோ மீட்டர் இலக்குகளை தாக்கும்.