Aadhaar card renewal deadline extended; can be used till June 14, 2027  google
இந்தியா

ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு : 2027 ஜூன் 14 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்...

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Rohini

அவகாசம் நீட்டிப்பு

ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2027 ஜூன் 14 க்கு வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒழுங்குமுறை விதிகள் ஆணையம்

ஆதார் எண் மற்றும் அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிர்க்கவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியிருந்தது.

10 ஆண்டுக்கு ஒருமுறை புதுபிக்க வேண்டும்

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் எண் அல்லது அட்டை வைத்திருப்போர் பெயர் திருத்தம், தந்தை அல்லது கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றின் சமீபத்திய தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

புதுப்பித்தல் ஏன் அவசியம்

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுபிக்க வேண்டும். ஏனெனில் குழந்தை வளரும்போது, அவர்களின் கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் விவரங்கள் மாறுவதால், இந்தப் புதுப்பிப்புகள் அவசியமானதாக இருக்கிறது.

ஆதார் பதிவு மையத்தை ஆணுகலாம்

பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் என அனைத்து விவரங்களையும் புதுப்பிக்க ஆதார் பதிவு மையத்தை அணுக வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்

ஆதரில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய https://myadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆவணத்தைப் பதிவேற்றம் செய்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் ஆதார் விவரங்களை கட்டணமின்றி இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் முன்னதாக வழங்கப்பட்டிருந்த நிலையில், வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் இல்லை

இதன் மூலம் எந்தவித கட்டணமும் இன்றி தங்களின் விவரங்களை இணையதளம் வழியாக புதுப்பித்துக் கொள்ளலாம்.