பழமை வாய்ந்த அயோத்தி
26 Lakhs Lamps at Ayodhya Lights 2025 for Guinness World Record : உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி இதிகாச கதையோடு தொடர்பு கொண்டது. ராமாயண கதையின் படி, இந்த பகுதியை தான் தசரதர் ஆட்சி செய்ததாகவும், ராம்பிரான் அயோத்தி அரசராக சிறப்பான ஆட்சியை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, வட இந்தியர்களின் புண்ணியத் தலங்களில் ஒன்றாக அயோத்தி(Ayodhya Deepotsav 2025) எப்போதும் திகழ்ந்து வருகிறது.
தீபாவளிக்கு அகல் விளக்குகள் ஏற்றுதல்
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19ம் தேதி தீபத் திருவிழா(Diwali Festival 2025 Date) நடைபெற உள்ளது.
26 லட்சம் அகல் விளக்குகள்
அப்போது 26 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன்முலம் கடந்த ஆண்டு (24 லட்சம் அகல் விளக்குகள்) சாதனை முறியடிக்கப்பட உள்ளது. இந்த விளக்குகள் சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரில் உள்ள மற்ற கோயில்கள் மற்றும் குடியிருப்புகளை ஒளிரச் செய்ய உள்ளன.
ராமர் திரும்பிய நாள் தீபாவளி :
நரகாசுரன் வதைக்கப்பட்டதை தமிழகத்தில் தீபாவளியாக கொண்டாடுவதை போன்று, உத்தர பிரதேசத்தில் இலங்கை போருக்கு பிறகு ராமர் அயோத்தி திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அகல் விளக்குகளை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தேவையான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விளக்குகளை ஏற்றுவதற்கான பக்தர்களும் பதிவு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நிகழ்வை காண பல்லாயிரக் கணக்கானோர் வருவார்கள் என்பதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
டிரோன்கள் மூலம் ராமாயண காட்சிகள்
அகல் விளக்குகளின் ஒளியால் மட்டுமின்றி, டிரோன்களின் வண்ண ஜாலத்தாலும் அயோத்தி மேலும் ஒளிர இருக்கிறது. இதற்கான தீபாவளி நாளில் 1,100 டிரோன்கள் வானில் பறக்க விடப்பட உள்ளன. இவற்றின் மூலம் ராமாயணத்தின் காட்சிகள் ஒளிப்படங்களாக சித்தரிக்கப்பட்டு, காண்போரை பரவசப்படுத்தும்.
மேலும் படிக்க : புரட்டாசி கடைசி சனிக்கிழமை : ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளம்
அயோத்தியில் கொண்டாடப்படும் தீபாவளி வெறும் திருவிழா மட்டும் கிடையாது. ஆன்மிகம், நம்பிக்கை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் மெகா விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் அகல் விளக்கு நிகழ்வை கண்டு களிக்க வெளிநாட்டவரும் வருகை தருவார்கள், இதன் மூலம் அயோத்தி உலக அளவில் புகழ்பெறும்.
======================