BJP Ex Leader Annamalai Opinion About Delhi Car Bomb Blast Involved Doctors Google
இந்தியா

எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் - அண்ணாமலை!

Annamalai on Delhi Blast : டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர் என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Bala Murugan

குண்டு வெடிப்பு

Annamalai on Delhi Blast : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது வருகிறது. இந்நிலையில், இந்த கார் வெடிப்பு , குண்டு வெடிப்பு என டெல்லி காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு தொடர் சோதனையும் நடைபெற்று வருகிறது.

தற்போது, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 மருத்துவர்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தொடர் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை(Annamalai on Delhi Blast) தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை பேச்சு

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் வருகிற 19-ந் தேதி தென்னிந்திய இயற்கை விவசாய சம்மேளம் சார்பில் இயற்கை விவசாய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகிற 19-ந்தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார்(PM Modi Visit Coimbatore). இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 5 ஆயிரம் இளம் இயற்கை விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார் என்று தெரிவித்தார்.

இயற்கை விஞ்ஞானிகளை சந்திக்கும் மோடி

மேலும், தென்னிந்தியாவில் பணிபுரியும் 50 இயற்கை விஞ்ஞானிகளை சந்தித்து பேசுகிறார். நாட்டு மாடுகளை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் விவசாய நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்கிறார். வேறு எந்த கட்சி நிகழ்ச்சிகளும் கிடையாது என்று கூறினார்.

சதி திட்டம் தீட்டிய மருத்துவர்கள் கைது

மருத்துவர்கள் பயங்கரவாதிகளாக செயல்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் இந்திய பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில் குஜராத்தில் உள்ள டாக்டர்கள் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், அவர்கள் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் ரசாயனம் கலந்து பலரை கொல்வதற்கும் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

எல்லா கட்சியனரும் ஒன்றாக சேர வேண்டும்

டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். மும்பையில் நடந்தது போன்று டெல்லியில் நடத்த வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என தெரிவித்துள்ளனர். எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும் என்று தெரிவித்தார்.