நேபாள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி வழங்கி, இமயமலையைப் பாதுகாக்க இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகள் இணைந்து வாரியம் அமைக்க சத்குரு கோரிக்கை வலியுறுத்தியுள்ளார்.
நேபாள வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண உதவி
நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
இவர்களில் மாயமானவர்களில் ஆதியோகி சத்குருவின் ஈஷா சார்பில் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்டவர்களும் அடங்குவர்.
இந்நிலையில், வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்திற்கு உதவும் வகையில், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்குவதாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அறிவித்துள்ளார்.
5 நாடுகள் இணைந்த வாரியம் அமைப்போம்
மேலும் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சத்குரு முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு...
அரசியல் எல்லைகளைக் கடந்த பாதுகாப்பு
"மலைகளுக்கு அரசியல் சார்போ அல்லது மொழிகளோ தெரியாது. இமயமலை என்பது பூமியின் மிகவும் அற்புதமான, அதேவேளையில் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு பகுதியாகும்.
அரசியல் எல்லைகளைக் கடந்து இமயமலையைப் பாதுகாக்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய 5 நாடுகள் இணைந்து ஒரு வாரியத்தை அதாவது Himalayan Board என்ற பெயரில் உடனடியாக உருவாக்க வேண்டும்" என்றார்.
கூட்டுப் பொறுப்பு
மேலும் "எதிர்கால சந்ததியினருக்காக இமயமலையைப் பாதுகாக்க வேண்டும். 'இது நேபாளத்தின் பிரச்சினை, அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்' என்று ஒதுங்கினால் இதற்கு எப்போதுமே தீர்வு கிடைக்காது".
கால பைரவ கர்மா சடங்கு
இயற்கை மாற்றத்தால் ஏற்பட்ட இந்தத் துயரத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 'கால பைரவ கர்மா' சடங்கு நடத்தப்படும் என்றும் சத்குரு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நேபாள பலி ஆயிரத்தை நெருங்குகிறது : 4,500 பேர் மாயம், மீட்டுப் பணிகள் தீவிரம்..!
=====