CBSE 2026 Board Exams new guidelines : What Students Need to Know google
இந்தியா

CBSE தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு : புதிய விதிகள்

CBSE Board Exam 2026: 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய விதிகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

Rohini

CBSE Board Exam Rules 2026 New Guidelines

நாடு முழுவதும் மாநில பாட திட்டம் அல்லாமல் சிபிஎஸ்சி முறைப்படி பாடத்திட்டங்களை பெற்றுக்கொள்ளும் அனைத்து பள்ளி நிறுவங்களுக்கும் புதிய விதிகளை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது .

பொதுத்தேர்வு தேதி

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை தேர்வானது நடைபெறுகிறது .

இதற்கிடையில், மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருந்து தேர்வுகள் மட்டும் தள்ளி வைக்கப்படுவதாகவும் அதாவது, அந்த நாளில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு தேர்வு, மார்ச் 11ஆம் தேதிக்கும், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது .

புதிய விதிமுறைகள்

கட்டாய வருகை பதிவு

9-10, 11-12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத இரண்டு ஆண்டுகளும் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவை பெற்றிக்க வேண்டும்.

மேலும், மருத்துவ விடுப்பு வழக்கம் போல ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆனால், அதற்கான ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியம் பெரும் இன்டெர்னல் மதிப்பெண்

பொது தேர்வும் எழுதும் மாணவர்களுக்கு இன்டெர்னல் மதிப்பெண்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

அதாவது, பள்ளிகளில் நடத்தும் தேர்வுகள், அசைன்மென்ட், project போன்றவற்றில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் , 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி பெறுவார்கள் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இரண்டு முறை தேர்வு எழுதும் வசதி

2026ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு முறை பொதுத் தேர்வுகளை எழுதலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி மார்ச் மாதத்தில் ஒரு தேர்வும், விருப்பப்பட்டால் மே ஜூன் மாதங்களில் மாணவர்கள் தேர்வும் எழுதலாம்.

இந்த இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுக்கிறார்களே அது கணக்கில் கொள்ளப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

விடைத்தாளில் மாற்றம்

10,12ஆம் வகுப்பு விடைத்தாளில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, சமூக அறிவியல், அறிவியல் பாடங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடைத்தாளில் மட்டுமே எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளது .