central government has issued an order to smartphone companies to install the Sanchar Saathi app on new cell phones 
இந்தியா

Sanchar Saathi: அனைத்து போன்களிலும் கட்டாயம் : மத்திய அரசு அதிரடி

Sanchar Saathi Mobile App Launch : சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவ, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Kannan

சஞ்​சார் சாத்தி செயலி

Sanchar Saathi Mobile App Launch By Central Govt : உலகின் மிகப்​பெரிய தொலைத்​தொடர்பு சந்​தைகளில் ஒன்​றாக இந்​தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் மட்​டும் 120 கோடி சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். இந்த நிலை​யில், சைபர் பாது​காப்​புக்​காக மத்​திய அரசு தனியாக சஞ்​சார் சாத்தி செயலியை அறிமுகப்படுத்தியது.

புதிய போன்களில் கட்டாயம்

இவற்றை புதிய போன்​களில் நிறு​விய பிறகே விற்​பனைக்கு அனுப்ப வேண்​டும். இதனை முன்​னணி ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​கள் 90 நாட்​களுக்​குள் உறுதி செய்ய வேண்​டும் என்று மத்​திய அரசு உத்தரவிட்டுள்ளது. சஞ்​சார் சாத்தி செயலி ஜனவரி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

ஸ்மார்ட்போன்கள் மீட்பு

அன்​றி​லிருந்து இன்று வரை சுமார் 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட தொலைந்து போன செல்போன்​களை இந்த செயலி கண்​டு​பிடிக்க உதவி​யுள்​ளது. அக்​டோபரில் மட்​டும் இந்த செயலி உதவி​யுடன் 50,000 ஸ்மார்ட்​போன்​கள் மீட்​கப்​பட்​டுள்​ள​து.

பொதுமக்களுக்கு சேவை

சஞ்​சார் சாத்தி இந்​திய தொலைத்​தொடர்​புத் துறை​யின் சிறப்பான ஒரு முயற்​சி​யாகும். இது குடிமக்​களுக்கு செல்போன் பாது​காப்பு மற்​றும் விழிப்​புணர்வை மேம்​படுத்த ஒரு வெப் போர்ட்​டல் மற்​றும் செல்போன் செயலியை வழங்​கு​கிறது. இது பயனர்​கள் தொலைந்து போன அல்​லது திருடப்​பட்ட தொலைபேசிகள் குறித்து புகாரளிக்​க​வும், மோசடிகளை தடுக்​க​வும், அரசு தொடர்​பான பிற குடிமக்​கள் சேவை​களை அணுக​வும் அனு​ம​திக்​கிறது.

எதிர்க்கும் ஆப்பிள் நிறுவனம்

மத்​திய அரசு பிறப்​பித்​துள்ள இந்த புதிய உத்​தரவை சாம்​சங், விவோ, ஓப்​போ, ஷாவ்மி நிறு​வனங்​களு​டன் சேர்ந்து ஆப்​பிளும் பின்​பற்ற வேண்​டிய கட்​டா​யம்(Sanchar Saathi Mandatory in All Mobile Phones)​ ஏற்​பட்​டுள்​ளது. ஏற்கனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் ஆப்பிள் நிறுவனம் மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

======================