Central Government has stated that thousands of cases have been pending in courts for several years AI generated
இந்தியா

”நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்” : உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000...!

நீதிமன்றங்களில் ஆயிரக் கணக்கான வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கி கிடப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Kannan

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பப்​பட்ட கேள்வி ஒன்​றுக்கு மத்​திய சட்​டத் துறை அமைச்​சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, “நீதி​மன்ற உள்​கட்​டமைப்பு, மேம்​பாட்​டிற்​காக 2011ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் செல​விடப்​பட்​டுள்​ளது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகள்

ஆனாலும், உச்ச நீதி​மன்​றத்​தில் 10,000-க்​கும் அதி​க​மான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன. இதில் 558 வழக்குகள் 20 ஆண்​டு​களை​யும், 26 வழக்​கு​கள் 30 ஆண்டுகளையும் கடந்துவிட்டன.

உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் வழக்குகள்

25 உயர் நீதி​மன்​றங்​களில் 80,000-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாகத் தேங்​கிக் கிடக்​கின்​றன. போதிய நீதிப​தி​கள் மற்​றும் பணி​யாளர்​கள் இல்​லாதது, உள்​கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் வழக்​கு​களின் சிக்கலான தன்​மையே விசா​ரணை வேகத்​தைத் தீர்மானிக்கின்றன.

நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன

தற்​போது உயர் நீதி​மன்​றங்​களில் அனு​ம​திக்​கப்​பட்ட 1,122 நீதிபதி பணி​யிடங்​களில் 341 இடங்​கள் காலி​யாக உள்​ளன. அதே​போல, கீழமை நீதி​மன்​றங்​களில் உள்ள 30,868 அனு​ம​திக்​கப்​பட்ட பணி​யிடங்​களில் 7,311 இடங்​கள் காலி​யாக உள்​ளன.

நீதிப​தி​களை நியமிப்​ப​தில் உயர் நீதி​மன்ற கொலீஜி​யங்​கள் காட்​டும் தாமதமே இதற்குக் காரண​மாக அமை​கிறது. 5 ஆண்​டு​களுக்​கும் மேலாக நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து முடித்து வைப்​ப​தற்காக, 25 உயர் நீதி​மன்​றங்களி​லும் மற்​றும் மாவட்ட நீதிமன்றங்களி​லும் ‘நிலுவை வழக்​கு​கள் தீர்​வுக்​குழுக்​கள்’ அமைக்​கப்​பட்​டுள்​ளன.

சட்டத் திருத்தங்கள்

வழக்​கு​களின் தேக்​கத்​தைக் குறைக்​கும் நோக்​கில் அரசு பல்​வேறு முக்​கியச் சட்​டத் திருத்​தங்​களைக் கொண்டு வந்​துள்​ளது. அதன்​படி, 2023- ஆண்​டின் புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள், காசோலை உள்​ளிட்ட மாற்​று​முறை ஆவணங்​கள் திருத்​தச் சட்​டம் (2018)...

வணிக நீதி​மன்​றங்​கள் திருத்​தச் சட்​டம் (2018) மற்​றும் குறிப்பிட்ட பரி​காரத் திருத்​தச் சட்​டம் (2018) ஆகியவை இயற்றப்பட்டு நடை​முறைப்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு மத்​திய அமைச்​சர்​ விளக்கம் அளித்துள்ளார்.

=================