Chandrababu Naidu orders to ask questions to devotees in Andhra temples! google
இந்தியா

திருப்பதி கோவிலில் நிறை, குறைகள் : பக்தர்களிடம் விவரம் சேகரிப்பு

திருப்பதி தேவஸ்தானம் குறித்து பக்தர்களிடம் நிறை, குறைகளை கேட்டு வருகிறது கோவில் நிர்வாகம். ஆந்திரா கோவில்களில் நிறை, குறைகளை கேட்கவேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Baala Murugan

ஆந்திராவில் கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் கேள்வி

chandira babu naidu orderதிருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.

அதாவது, ஆந்​திர மாநிலத்​தில் உள்ள அனைத்து முக்​கிய கோயில்​களி​லும் பக்​தர்​களுக்கு வேண்​டிய வசதி​கள் உள்​ளனவா என்​பது குறித்து கோயில் நிர்​வாகத்​தினர் பக்​தர்​களிடையே கருத்​துகளை கேட்டு வரு​கின்​றனர்.

சந்திரபாபு நாயுடு உத்தரவு

இதன் அடிப்​படை​யில் நிறை, குறை​களை ஆராய்ந்து சரி செய்ய வேண்​டுமென முதல்​வர் சந்திர​பாபு நாயுடு கோவில் நிர்வாகத்திற்கு உத்​தர​விட்​டுள்​ளார். இந்நிலை​யில், நேற்று முதல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் ஸ்ரீவாரி சேவகர்​கள் மூலம் திரு​மலைக்கு வரும் பக்​தர்​களிடம் நேரடி​யாக கேள்வி​களை கேட்டு கருத்​துக்​களை சேகரித்து வரு​கின்​றனர்.

பக்தர்களிடம் கருத்துக் கேட்பு

இதன்மூலம் கோவில் நிர்வாகத்தை சரியான முறையில் வழிநடத்தலாம் என்பதால், கோவில் நிர்வாம் மற்றும் ஆந்திர மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

17 வகையான கேள்விகள் கேட்கப்படுகிறது

இதில் குறிப்பாக தரிசனம், ஆர்​ஜித சேவை​கள், கல்​யாண கட்​டா, அன்​ன​தானம், பிர​சாதம், தங்​கும் விடு​தி​கள், போக்​கு​வரத்​து, தேவஸ்​தான ஊழியர்​கள் நடந்து கொள்​ளும் முறை, லக்​கேஜ் மைய வசதி, தனி​யார் ஓட்​டல்களில் உள்ள விலைப்​பட்​டியல் போன்​றவை குறித்து மொத்தம் 17 கேள்வி​கள் பக்​தர்களிடம் கேட்கப்படுகிறது.

அதற்கு பக்தர்கள் பதிலளித்து வரும் நிலையில், இந்த முடிவிற்கு திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.