கூட்டத்தொடரில் நடந்த விவாதம்
CM Chandrababu Naidu on Tirupati Laddu Adulteration Case : ஆந்திர பேரவையில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது நெய்யில் கலப்படம் கலந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் அந்த லட்டுகள் கலப்படம் என்று தெரிந்தே வாங்கியதாக தீவிர குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதன் மீது சுமார் 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
சந்திரபாபு நாயுடு உரை
இது குறித்து பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு கலப்பட நெய் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை நடத்தியதில் அதில் அதிகாரிகள், ஊழியர்கள், நிபுணர்கள் என அனைவரும் சேர்ந்தே இந்த தவறை செய்தனர் என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால் அவர்கள் மீது ஆந்திர அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கலாம் என எனக்கு பரிந்துரை செய்தது.இதனை விசாரிக்கவே ஒரு நபர் விசாரணை கமிஷன் தற்போது அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
என்டிடிபி அறிக்கை
லட்டு தயாரித்த நெய்யில் விலங்குகளின் கொழுப்பு, மீன் கொழுப்பு ஆகியவை கலந்திருப்பதாக நானாக கூறவில்லை என்றும் ,என்டிடிபி கொடுத்த அறிக்கையை ஆதாரமாக கொண்டு அந்த விஷயத்தை வெளியில் கூறினேன் என்றும் தெரிவித்தார்.
துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது
நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருந்தது என்பது என்டிடிபி கொடுத்த அறிக்கையில் இருந்தது என்றும் ஆனால் அது நெய்யே இல்லை என சிபிஐ அறிக்கை கொடுத்துள்ளது.என்றும் குறிப்பிட்டார்.