ஏஐ உச்சி மாநாட்டில் அவர் பேசியதாவது
Sam Altman on India AI Impact Summit 2026 : இந்தியாவில் மட்டும் வாரந்தோறும் சுமார் 10 கோடி பேர் சாட் ஜிபிடி தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இதில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் மாணவர்கள் என்பதுதான் என்னும் கூடுதல் சிறப்பாக இருக்கின்றது என்றும்
ஓபன் ஏஐ நிறுவனத்தின் கோடிங் தளமான ‘கோடெக்ஸ்’ பயன்பாட்டில் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா திகழ்கிறது.
கடந்த ஓராண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை எட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .
பல்வேறு வகையில் பங்களிக்கும் ஏஐ தொழில்நுட்பம்
பள்ளி அளவிலான கணிதப் பாடங்களுக்கே திணறிய ஏஐ தொழில்நுட்பம், இன்று ஆராய்ச்சி அளவிலான சிக்கலான கணிதத் தீர்வுகளை வழங்குவதுடன், இயற்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்பு பரிமாணங்களை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது வியப்பளிப்பதாகவும் கூறினார்
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி துறையில் மாற்றத்தை கொண்டு வரும்
தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நாட்டின் கைகளில் முடங்கிவிடக் கூடாது.
இது ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சுதந்திரம், சமத்துவம், மனித குல வளர்ச்சி நிலை நிறுத்தப்படும் என்றும் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக மருத்துவம், கல்வி போன்ற சேவைகளின் செலவு குறையும்.
அதே வேளையில், தற்போதைய சில வேலைவாய்ப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தனது கருத்தினை தெரிவித்தார் .