ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐஆர்டிசி இணையம் மற்றும் செயலி வழியாக தட்கல் டிக்கெட் பதிவு செய்பவர்கள், தங்கள் ஐஆர்டிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.