Kailash Nathan announced 63,000 heads households living below the poverty line in Puducherry will be given Rs. 5,000  google
இந்தியா

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி : ”63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.5,000” : முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார்.

Rohini

63,௦௦௦ குடும்பங்களுக்கு ரூ.5,000

Governor Kailash Nathan announced 63,000 heads households living below the poverty line in Puducherry will be given Rs. 5,000 : தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இதுவரை வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை உயர்த்தி ரூ.5,000 வழங்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் அதனை உயர்த்தி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் உறுதிப்படுத்துள்ளார்.

இதுவரை வழங்கப்பட்ட உதவித்தொகை

இதுவரை புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.

இத்திட்டத்திற்கு பயன் பெரும் பயனாளிகள்

இத்திட்டத்திற்கு பயன்பெறும் பயனாளிகளாக 21 வயது முதல் 55 வயதுக்குள் உள்ள, சிவப்பு நிற குடும்ப அட்டையை வைத்துள்ள பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட சிறப்பு தொகை

இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் மாதம் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை உயர்த்தி ரூபாய் 5000 முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :மகளிருக்கு ரூ.2,000,ஆண்களுக்கு பேருந்தில் இலவசம்:அதிமுக வாக்குறுதி

மகளிருக்கு மாதம் ரூ.2,000

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதாவது மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்) : சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது