Key agreements were signed during the constructive talks held between the Prime Ministers of India and Japan. AI generated
இந்தியா

”முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து” : இந்தியா-ஜப்பான் பிரதமர்கள் பேச்சுவார்த்தை : ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை...!

இந்தியா - ஜப்பான் பிரதமர்கள் இடையே நடைபெற்ற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Kannan

இந்தியா - ஜப்பான் பிரதமர்கள்

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி வந்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் பிரதமர் மோடியும் அவரும் பங்கேற்ற இந்தியா - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சியைப் இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.

ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் தொடங்கி வைத்​தனர். பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின.

பிரதமர்கள் பேச்சுவார்த்தை

ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் அதி​காரப்​பூர்​வ​மாக சந்​தித்​துப் பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஜப்பான் அரசுக்கு மோடி நன்றி

இந்​தி​யா​வின் ஆட்டோ மொபைல், மின்​னணு துறை வளர்ச்​சிக்கு ஜப்​பான் முக்​கிய பங்​களிப்​பு​களை வழங்கி உள்​ளது. தற்​போது ஏஐ (செயற்கை நுண்​ணறி​வு) தொழில்​நுட்​பத்​தில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றன.

பாது​காப்பு தொடர்​பாக முக்​கிய ஒப்​பந்தம் கையெழுத்​தாகி உள்​ளது. இதுதவிர, மருந்து உற்​பத்​தி, மருத்​துவ உபகரணங்​கள், உயிரி தொழில்​நுட்​பம், நிதிச் சேவை தொடர்​பாக​வும் முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன.

இந்​தி​யா- ஜப்​பான் பயோ காஸ் திட்​டத்​தின்​கீழ் நாடு முழு​வதும் புதி​தாக 1,000 பயோ காஸ், இயற்கை உரத் தொழிற்​சாலைகள் கட்​டப்​படும். இதன்​மூலம் இந்​திய கிராமங்​கள் வளர்ச்சி அடை​யும்.

நல்லுறவு மேலும் வலுப்பெறும்

இந்தி​யா​வில் கச்சா எண்​ணெய் கையிருப்பை அதி​கரிக்​கத் தேவையான தொழில்​நுட்ப உதவி​களை வழங்க ஜப்​பான் முன்​வந்​துள்​ளது.

பேட்​டரி, பசுமை ஹைட்​ரஜன், அணுசக்தி, கப்​பல் கட்​டு​மானம், விமான போக்​கு​வரத்​து, சரக்கு போக்​கு​வரத்து உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​கள் இணைந்து பணி​யாற்​றும்.

ஜப்பான் பிரதமர் உறுதி

இந்​தி​யா​வின் பெட்​ரோலிய கையிருப்பை அதி​கரிக்க தேவை​யான தொழில்​நுட்ப உதவி​களை ஜப்​பான் வழங்​கும். எரிசக்​தி, அரிய​வகை கனிமங்​கள் தேவையைப் பூர்த்தி செய்ய இரு நாடு​களும் ஒன்​றிணைந்து செயல்​படும்.

ஜப்​பான் - இந்​திய கடற்​படைகள் இணைந்து விரை​வில் போர்ப் பயிற்​சிகளில் ஈடு​படும். இரு நாடு​களும் இணைந்து ஆயுதங்​களை உற்​பத்தி செய்​யும்.

இரு நாடு​கள் இடையே கையெழுத்தான பாது​காப்பு ஒப்​பந்தத்தின்​படி, ‘இந்​தி​யா​வில் தயாரிப்​போம்’ திட்​டத்​தின்​கீழ் போர்க் ​கப்​பல்​களுக்கு தேவை​யான சிறப்பு ஆன்டெ​னாக்​கள் தயாரிக்​கப்பட உள்​ளன.

இதன்​மூலம் எதிரி​களின் ரேடார்​களால் இந்​திய, ஜப்​பானிய போர்க் கப்​பல்​களை கண்​டுபிடிக்க முடி​யாது. வரும் காலத்தில் இணைந்து போர்க்கப்​பல்​கள் தயாரிக்​க​வும் கொள்​கைரீ​தி​யில் உடன்​பாடு எட்​டப்​பட்​டுள்​ள​தாக ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்​சி தெரிவித்தார்.

35,000 கோடியில் கார் தொழிற்சாலை

ஹரி​யா​னா​வின்​ கார்​கோ​டா​வில்​ ரூ.35,000 கோடி முதலீட்​டில்​ மாருதி சுசூகி நிறு​வனத்​தின்​ கார்​ உற்​பத்​தி தொழிற்​சாலை கட்​டப்​பட்​டுள்​ளது.

பிரதமர்​ மோடி​யும்​, ஜப்​பான்​ பிரதமர்​ சனே டகாய்ச்​சி​யும்​ இணைந்து காணொலி வாயி​லாக கார்​ தொழிற்​சாலையை தொடங்கி வைத்​தனர்​.

5 லட்சம் கார்கள் தயாரிப்பு

800 ஏக்​கரில் அமைந்​துள்​ள இந்​த ஆலை உலகின்​ மிகப்​பெரிய கார்​ தொழிற்​சாலைகளில்​ ஒன்​றாகும்​. முதல்​கட்​ட​மாக, இங்கு ஆண்​டுக்​கு 5 லட்​சம்​ கார்​கள்​ உற்​பத்​தி செய்​யப்​படும். பின்​னர்​ படிப்​படி​யாக இது 10 லட்சம்​ வரை அதி​கரிக்​கப்​பட உள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்

‘‘மும்பை - அகமதாபாத் இடையே 2027ல் புல்லட் ரயில் சேவையைதொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை ஜப்பான் வழங்கும். இந்த வழித்தடத்தில் ஜப்பானின் அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான இ-10 ஷிங்கன்சென் அறிமுகம் செய்யப்படும்’’.

புல்லட் ரயில்கள் மணிக்கு 320 முதல் 400 கி.மீ. வேகத்தில் செல்லும். இதன்மூலம் மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் அகமதாபாத் சென்றடையலாம்.

=======================