ஓணம் பண்டிக்கை , 100 க்கும் மேற்ப்பட்ட ரயில்கள் இயக்கம்
கேரளா மக்களின் முதன்மையானதும் , கோலகலமாக கொண்டாடப்படுவதுமான பண்டிகை ஓணம் பண்டிகையாகும் .
இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் சேவைகளை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று ஒன்றிய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்
மக்களின் கோரிக்கையை ஏற்று ரயில் சேவை தொடக்கம்
கேரள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ரயில்வே அமைச்சகம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பத்து நாட்கள் நடைபெறும் கொண்டாட்டம்
2026-ஆம் ஆண்ற்கான ஓண்ம் பண்டிக்கைஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி, திருவோணம் நன்னாளான ஆகஸ்ட் 26, 2026 வரை பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது
இதோடுமட்டுமல்லாமல் சுற்றுலா தொடர்பான நிகழ்வுகள் மாதம் முழுவதும் தொடரும் , அதற்கேற்ற வகையில் பயனத்திற்கான ரயில் சேவை தேவையை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது
பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்கு நடவடிக்கை
பண்டிகைக் காலத்தில் எதிர்பார்க்கப்படும் பயணிகளின் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு ரயில் சேவைகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
=================