Prime Minister Modi accused oopposition parties of betraying women, preventing the passage of Reservation Bill google
இந்தியா

West Bengal : பெண்களுக்கு திரிணாமூல் துரோகம் : ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 : பிரதமர் மோடி பரப்புரை

இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேறாமல் தடுத்து, மகளிருக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் இழைத்து விட்டதாக, பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

Kannan

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் 23 மற்றும் 29ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வு​கிறது.

பிரதமர் மோடி பரப்புரை

பாஜக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்​தார்.

” பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்​யும் மசோ​தாவை திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தோற்​கடித்​து​விட்​டன.

பெண்களுக்கு திரிணாமூல் துரோகம்

பெண்​களுக்கு துரோகம் இழைத்த திரிண​மூல் கட்சிக்கு வரும் தேர்​தலில் பெண்கள் தகுந்த பாடம் கற்​பிப்​பார்​கள். மேற்​கு ​வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்களுக்கு ரூ.5 லட்​சம் வரை மருத்துவ காப்​பீடு வழங்​கப்​படும்.

பெண்களுக்கு சலுகைகள்

பெண்​களின் குடும்​பத்​தில் யாருக்​காவது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் அவர்​களுக்கு அரசு மருத்​து​வ​மனை​களில் இலவச​மாக டயாலசிஸ் சிகிச்சை அளிக்​கப்​படும்.

மாதம் ரூ.3,000 உதவித்தொகை

மேற்​கு ​வங்க பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்​கப்​படும். இதன்​படி ஆண்​டு​தோறும் பெண்​களுக்கு ரூ.36,000 வழங்​கப்​படும். மத்​திய அரசு சார்​பில் பெண்​களின் குழந்​தைப்​பேறுக்கு ரூ.21,000 அளிக்கப்​படும்.

பெண் குழந்தைகள் கல்வி - ரூ.50,000

பெண் குழந்​தைகளின் கல்விக்கு ரூ.50,000 வழங்​கப்​படும். பாஜக ஆட்சி அமைக்​கும்​போது மத்​திய அரசின் அனைத்து திட்​டங்​களும் அமல்​படுத்​தப்​படும். கடந்த 15 ஆண்​டு​களாக திரிண​மூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வரு​கிறது.

திரிணாமூல் மீது தாக்கு

ஆனால் மக்​களுக்கு எந்த பயனும் இல்​லை. கல்​வி, சுகா​தா​ரம், வேளாண்மை உள்​ளிட்ட துறை​களில் மாநிலம் மிக​வும் பின்​ தங்​கிய நிலை​யில் உள்​ளது. அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி உள்ளது.

சட்​டம், ஒழுங்கு பாதிக்​கப்​பட்டு மாநிலம் முழு​வதும் வன்​முறை சம்பவங்கள் அரங்​கேறி வரு​கின்​றன. மத்​தி​யில் ஆளும் பாஜக அரசே, வங்​க மொழிக்கு செம்​மொழி அந்​தஸ்தை வழங்​கியது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

விவ​சா​யிகளின் வாழ்க்​கை​யில் மிகப்​பெரிய மாற்​றத்தை ஏற்படுத்​து​வோம். பாஜக ஆட்சி அமைத்​தால் நேர்மை​யான முறை​யில் அரசு பணிக்கு ஆட்​தேர்வு செய்​யப்​படும். எனது அனுபவத்​தின் அடிப்​படை​யில் மேற்​கு ​வங்​கத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படு​வது உறு​தி” இவ்​வாறு பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

=====