விடைபெறும் 2025
ndia has boarded the Reform Express! 2025 witnessed pathbreaking reforms across various sectors which have added momentum to our growth journey. They will also enhance our efforts to build a Viksit Bharat : 2025ம் ஆண்டு நிறைவு பெற்று 2026ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இதையொட்டி, சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரிவான பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
11 ஆண்டுகளில் சீர்திருத்தங்கள்
“ நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு 2025ம் ஆண்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டன. எனவே,2025 இந்தியாவின் ஆண்டாக நினைவு கூரப்படும்.
ஜிஎஸ்டி - மிகப்பெரிய மாற்றங்கள்
2025ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 5% மற்றும் 18% என்ற இரு விகிதங்கள் மட்டும் அமல் செய்யப்பட்டு உள்ளன. இதனால் அனைத்து வீடுகளிலும் பட்ஜெட் சுமை குறைந்திருக்கிறது.
விவசாயிகளுக்கு பயன்
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் நிறைவான பலன்களை அடைந்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் அனைத்து பொருட்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்தது.
வருமான வரி விலக்கு ரூ.12 லட்சம்
2025ம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. வருமான வரிச் சட்டம் 1961-க்கு பதிலாக வருமான வரிச் சட்டம் 2025 நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் வரி நடைமுறையில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது.
காப்பீட்டு துறை - 100% அந்நிய முதலீடு
ரூ.100 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், சிறு நிறுவனங்களாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பழைய சட்டங்கள் நீக்கம்
கடல்சார் வணிகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 5 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம் கடல்சார் வணிகம் கணிசமாக அதிகரிக்கும். காலத்துக்கு பொருந்தாத 71 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன.
எளிமையான வணிகம் - உற்பத்தி அதிகரிப்பு
நாடு முழுவதும் எளிதாக வணிகம் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மின்னணு, ஆட்டோ மொபைல் உட்பட பல்வேறு துறைகளில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
புதிய தொழிலாளர் சட்டங்கள்
29 பழைய தொழிலாளர் சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, புதிதாக 4 தொழிலாளர் சட்டங்கள் அமல் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் தொழில்துறை வளர்ச்சி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
புதிய அணுசக்தி சட்டம்
இந்திய அணு சக்தி துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க வகை செய்யும் புதிய அணுசக்தி சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய அணு சக்தி துறை அபார வளர்ச்சி அடையும். ஹைட்ரஜன் எரிசக்தி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊரக வேலைவாய்ப்பு - 125 நாட்கள்
புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (ஜி ராம் ஜி) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஊரக பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்திய உயர்கல்வி ஆணையம்
யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ உள்ளிட்ட உயர் கல்வி அமைப்புகளை ஒன்றிணைத்து இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்
மத்திய அரசின் சீர்திருத்தங்களால் சிறு வணிகர்கள், இளம் தொழில்நுட்ப நிபுணர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க மக்கள் என அனைத்து தரப்பினரும் பலன் அடைந்து வருகின்றனர்” இவ்வாறு அந்தப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
==============