Congress MP Rahul Gandhi break the rules in Parliament Source : SANSAD TV
இந்தியா

மக்களவை விதிகளை மீறினாரா ராகுல் : கடும் விமர்சனம்

Congress MP Rahul Gandhi break the Parliament rules : ராகுல் காந்தி கைலாஷ் மலைப்பகுதியில் சீன ஊடுருவல் குறித்து மக்களவையில் பேச முயன்ற போது, கடும் அமளி ஏற்பட்டது.

Rohini

அமளிக்கு காரணம் என்ன

Congress MP Rahul Gandhi break the Parliament rules : இந்​திய - சீன மோதலின்​ போது, சீனா​வின் டாங்குகள் இந்​திய எல்​லைக்​குள் நுழைந்​த​தாக முன்​னாள் ராணுவத் தளபதி நரவனே தனது நூலில் கூறி​யுள்​ள​தாக ராகுல் காந்தி கூறியதை அடுத்​து, மக்​களவை​யில் கடும் அமளி ஏற்​பட்​டது.

ராகுல் குறிப்பிட்டு பேசியது என்ன

டோக்​லாமில் ஒரு முகட்டை கைப்​பற்ற 4 சீன டாங்​கு​கள் நுழைந்​த​தாக முன்​னாள் ராணுவத் தளபதி எம்​.எம்​.நர​வனே தனது நூலில் கூறி​யுள்​ள​தாக ராகுல் குறிப்​பிட்​டார்.

அனுமதியில்லாத பேச்சுக்கு எதிர்ப்பு

இதற்கு பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங், “இந்​தப் புத்​தகம் இன்​னும் வெளி​யிடப்​பட​வில்லை என்​ப​தால் அதன் அடிப்​படை​யில் ராகுல் பேச முடி​யாது” என்​றார்.

உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் இதே கருத்தை வலி​யுறுத்​தி​னார்.ஓம் பிர்​லா​வும், பின்​னர் நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு​வும் எதிப்பை தெரிவித்தனர் .

ஓம் பிர்லா எதிர்ப்பு

ஒரு புத்​தகத்​தில் இருந்து அவ்​வாறு மேற்​கோள் காட்​டு​வதற்கு எதி​ரான அவை விதி​களைக் குறிப்பிட்டனர். அது வெளி​யிடப்​பட்​டிருந்​தா​லும் கூட, அவை​யின் நடவடிக்கைகளு​டன் தொடர்​பில்​லாத எந்​தவொரு புத்​தகத்​தில் இருந்​தும் மேற்​கோள் காட்​டு​வது அனு​ம​திக்​கப்​ப​டாது என ஓம் பிர்லா கூறினார்.

மக்களவை விதி கூறுவது என்ன

நாடாளு​மன்ற அலு​வலக வட்​டாரம் கூறுகை​யில், ‘மக்களவை எம்​.பி. தனது பேச்​சில் ஒரு புத்​தகம், செய்​தித்​தாள் அல்​லது கடிதத்​தில் இருந்து மேற்​கோள் காட்​டு​வது, அவை​யின் நடவடிக்​கைகளுக்​குத் தொடர்​புடைய​தாக இருந்​தாலன்​றி, தடை செய்​யப்​பட்​டுள்​ளது. இதை மக்​களவை விதி 349(I) குறிப்​பிடு​கிறது.

சபாநாயகர் அனுமதியை பெறவில்லை

இவ்வாறு செய்​வதற்கு முன்பு சில விதி​களை அந்த எம்​.பி. பின்​பற்​று​வது மிக​வும் முக்​கி​யம். இந்த விதி​யின்​படி அந்த எம்​பி, தனது உரைக்கு முன்​பாக சபா​நாயகரின் அனு​மதி பெற வேண்டும். ஏனெனில், இந்த விதியை மீறும் எம்​.பி. தனது பதவியை இழக்க நேரிடும்” என்று தெரிவிக்​கின்​றனர்.

ராகுல் பேசியதற்கு நடவடிக்கையா?

சபா​நாயகரின் அனு​மதி பெறாதது மட்​டுமின்​றி, ராகுல் காந்தி குறிப்​பிட்ட நூலானது இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை. ராகுலின் இந்த நடவடிக்கை நாடாளு​மன்​றக் குழு​வின் விசா​ரணைக்கு உகந்​த​தாக கருதப்​படு​கிறது.

எனவே, ராகுலின் சீனா பேச்சு மீது நடவடிக்கை எடுப்​பது குறித்து சபா​நாயகர் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோ​சனை செய்து வரு​வ​தாக​வும் தெரி​கிறது.