Rail One செயலியின் புதிய கட்டுப்பாடுகள்
இந்திய ரயில்வேயின் புதிய Rail One செயலி மூலம் எடுக்கப்படும் முன்பதிவு இல்லாத (Unreserved) டிக்கெட்டுகள் குறித்து ரயில்வே நிர்வாகம் மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது
ஏன் இந்த திடீர் எச்சரிக்கை அறிவிப்பு
இந்திய ரயில்வேயின் , Rail One செயலி மூலம் டிஜிட்டல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், போலி டிக்கெட் மோசடிகளைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது
டிக்கெட் காண்பித்தால் செல்லுபடியாகது, நேரடி ஆப் டிஸ்ப்ளே மட்டுமே செல்லும்
இனி Rail One செயலி மூலம் 'அன்-ரிசர்வ்டு' டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள், பயணத்தின் போது தங்களின் மொபைலில் உள்ள செயலியை நேரடியாகத் திறந்து காண்பித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் அதை மற்றுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது,
மாற்று வடிவ டிக்கெட்கள் எவை ஏற்றுக்கொள்ளப்படாது:
டிக்கெட்களை ஸ்கிரீன்ஷாட்டுகள் ,PDF வடிவங்கள்,வாட்ஸ்அப் பார்வேர்டுகள் ஆகியவற்றின் மூலமாக காண்பித்தால் செல்லுப்டியாகது என்றும் நேரடி ஆப் டிஸ்ப்ளேயில் டிக்கெடிடை காண்பித்தால் மட்டுமே செல்லும் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது
விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை
டிடிஇ பரிசோதனையின் போது போனில் செயலியை நேரடியாகக் காட்டாமல், ஸ்கிரீன்ஷாட்டோ அல்லது வாட்ஸ்அப் பார்வேர்டோ காண்பித்தால், அவர்கள் டிக்கெட் இல்லாத பயணிகளாக கருதப்படமாட்டாது என்று இந்திய ரயில்வே கண்டிப்புடன் தெரிவித்துள்ளது
புறநகர் சேவை ,2 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்
Rail One செயலி மூலம் புறநகர் டிக்கெட்டுகள் எடுக்கப்படும் பட்சதில் அது 2 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் முன்னரே எடுக்கும் பட்சத்தில் அது ஏற்றுக்கொள்ளப்ப்ட மாட்டது என்று இந்திஅய் ரயில்வே அறிவித்துள்ளது
'Show Ticket டிக்கெட்டை வசதியை உறுதி செய்து கொள்ள வேண்டும்
ரயில் நிலையங்களுக்குள் சில நேரங்களில் சிக்னல் கோளாறுகள் ஏற்படும் எனவே ,பயணிகள் தங்களின் 'Rail One' செயலியில் உள்ள 'Show Ticket' வசதியை முன்கூட்டியே சோதித்துக் கொள்வது அவசியம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
====================