மக்களின் நலனுக்காக உழைத்தவர் , அமித் ஷா புகழாரம்
மத்திய உள்துறை அமைச்சரான அமித ஷா மக்களின் நலனுக்காக அதிக நாட்கள் அயராது உழைத்தவர் மோடி என்று புகழ் பாராட்டியுள்ளார்
இது குறித்து தந்து எக்ஸ் பக்கதில் தெரிவித்துள்ளதாவது
மோடிஜியின் தலைமையின் கீழ், கடந்த 12 ஆண்டுகளில், ஏழை மக்களின் நலன் ஒருங்கே நனவாவதையும், முன்னோடியில்லாத வளர்ச்சியையும் நாடு முதன்முறையாகக் கண்டுள்ளது.
80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவது, நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களையும் 140-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களையும் தொடங்கி வைப்பது...
4 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உறுதியான வீடுகளை வழங்குவது, 1.45 லட்சம் கிலோமீட்டர் சாலைகளையும் 3000 கி.மீ நவீன விரைவுச் சாலைகளையும் அமைப்பது...
50 கோடி மக்களுக்கு ₹5 லட்சம் சுகாதாரக் காப்பீடும், 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளும் வழங்குவது,
விடுப்பு எடுக்காமல் தேசத்திற்காக உழைத்தவர்
இந்தியாவை உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றுவது என எதுவாக இருந்தாலும், மோடிஜி அவர்கள் இந்த 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், தேசத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் அயராது சேவை செய்துள்ளார்.
தலைமையின் நோக்கம் தூய்மையாகவும், இலக்குகள் தேசிய நலனை நோக்கியதாகவும், அர்ப்பணிப்பு முழுமையாகவும் இருக்கும்போது மட்டுமே இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும்.என்றும் தெரிவித்துள்ளார்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
கடந்த 12 ஆண்டுகளில் வெளியுறவு அமைச்சகமும் பாரதத்தின் வெளியுறவுக் கொள்கையும் ஒரு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன.
கடவுச்சீட்டு வழங்குவதையும் ஆவணங்களைச் சான்றொப்பமிடுவதையும் சாமானியக் குடிமக்களுக்கு ஒரு தடையற்ற அனுபவமாக மாற்றியுள்ளது.
திறந்த தூதரகங்கள் மூலமாகவும், இந்திய சமூக நல நிதியின் பயன்பாட்டை விரிவுபடுத்தியதன் மூலமாகவும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.
குறைகளைத் தீர்ப்பதற்கும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் டிஜிட்டல் தளங்களை உருவாக்கியுள்ளது.மக்களை வெளியேற்றுவது உள்ளிட்ட நெருக்கடிச் சூழ்நிலைகளுக்குத் திறம்பட பதிலளித்துள்ளது. உக்ரைன், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகியவை சில உதாரணங்கள்.
இந்தியர்கள் உலகளாவிய பணியிடங்களை அணுகுவதற்கும், உலகளாவிய பணியாளர் தொகுப்பில் ஒரு பகுதியாக மாறுவதற்கும் வழிவகுத்துள்ளது.
மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகள் புதிய சந்தைகளில் நுழைவதற்கு வழிவகுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுக்கான நலத்திட்டங்களை நிறுவியுள்ளது. பிற நாடுகளில் இந்தியக் கலாச்சாரத்தை ஊக்குவித்து, நமது பாரம்பரியம் மற்றும் மரபுகள் மீதான மதிப்பை மேம்படுத்தியது.
வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் செல்லும் இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 44 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களைத் திறந்தது.
இந்திய ராஜதந்திரம் நாட்டிற்காக 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்டுமாகச் செயல்படுகிறது. இன்று இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், வலுவான பெருமித உணர்வுடனும் வெளிநாடுகளுக்குப் பயணிக்கின்றனர்.
பிரதமர் மோடியின் பதவி கால ஆண்டுகளின் சிறப்பம்சங்கள் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்
=========================