வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிப்பு :
கடந்த சில வருடங்களாவே இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது எதனால் படித்த இளைஞர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
இது ஒரு புறம் இருகஹ் படித்து பட்டம் பெட்ரா இளைஞரகள் தங்கள் படித்த துறையை விட்டுவிட்டு வேறேதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுக்க கூடிய நிலை உருவாகி உள்ளது .
இதனால் நகர்ப்புறங்களில் இருக்க கூடிய மாணவர்களும் சரி படித்த இளைஞர்களும் சரி உணவு விநியோகம் மற்றும் பைக் டாக்ஸி போன்ற வேலைகளை தேர்ந்தெடுத்து வேலை செய்து வருகிறார்கள்
கேரள மாநிலம் 1 இடம் :
இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரள மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது .கடந்த ஐந்து ஆண்டுகளில் அது இன்னும் உயர்ந்து 7–8% ஆக சென்றுவிட்டது. இது தேசிய வேலைவாய்ப்பு சதவீதத்தை விட அதிகம் ,இதுவே இந்த மாநிலத்திற்கு அடுத்த படியாக பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளது என்பது கவனிக்க வேண்டிய ஒரு விசயமாக உள்ளது .
95.3% கல்வியறிவு கொண்ட கேரளாவில் வேலைவாய்ப்பு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் வேலையின்மை விகிதம் கடந்த சில ஆண்டுகளாக 7% அளவுக்கு மேல் நீடித்து வருகிறது. அதேசமயம், 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 22% பேர் வேலை தேடி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இளம் பெண்களிடையே இந்த விகிதம் 34%ஐ தாண்டியுள்ளது. கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கேரளா இன்னும் சவால்களை சந்தித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அரசாங்கம் கவனிக்க வேண்டிய விடயம் :
இளைஞர்களின் இந்த நிலைக்கு கேரள மாநில அரசாங்கமும் ஒரு கரணம் என அங்கு இருக்க கூடிய மாணவர்கள் ,படித்த பட்டதாரிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
குறிப்பாக கேரள மாநிலம் தான் இந்தியாவிலே அதிக படிப்பறிவு பெற்ற மாநிலமாக பார்க்கப்படுகிறது.
எனவே இதனை உடனடியாக அங்கு பொறுபேற்றுகிற காங்கிரஸ் அரசாங்கம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும் மாணவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்