Union Cabinet approved project to lay new 3rd and 4th railway lines, Gummidipoondi-Gudur route at a cost of ₹2,229 crore AI generated
இந்தியா

”கும்மிடிப்பூண்டி-கூடூர் இடையே 3, 4வது புதிய ரயில் பாதைகள்” : ரூ.2,229 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!

கும்மிடிப்பூண்டி - கூடூர் வழித்​தடத்​தில் 3, 4-வது புதிய ரயில் பாதைகள் ரூ.2,229 கோடி மதிப்​பில் அமைக்​கும் திட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்த​து.

Kannan

ரயில்வே வழித்தடங்கள்

இந்​திய ரயில்வே வலை​யமைப்பை வலுப்​படுத்​த​வும், ரயில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​க​வும் மேற்கு வங்​கம், ஒடிஸா, தமிழகம் மற்​றும் ஆந்​திரா ஆகிய 4 மாநிலங்​களில் 410 கி.மீ நீளத்​துக்கு 4 முக்​கிய பல வழித்தட திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன.

மொத்​தம் ரூ.9,450 கோடி மதிப்​பீட்​டிலான இத்​திட்​டங்​களை, 2030-31-ம் ஆண்​டுக்​குள் முழு​மை​யாக முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

கும்​மிடிப்​பூண்டி - கூடூர் ரயில் வழித்தடம்

இதில் சென்னை - கொல்​கத்தா முதன்மை வழித்​தடத்​தில் அமைந்​துள்ள மிக முக்​கியப் பிரி​வாக கும்​மிடிப்​பூண்டி - கூடூர் வழித்தடம் உள்ளது.

3, 4வது புதிய ரயில் பாதைகள்

90 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில், ரூ.2,229 கோடி மதிப்​பீட்​டில் 3, 4-வது புதிய ரயில் பாதைகள் அமைக்​கப்​பட​வுள்​ளன.

60 பேர் பயன்பெறுவர்

நான்கு ரயில்வே திட்​டங்​களின் மூலம் 6,448 கிராம மக்​கள் (சு​மார் 60 லட்​சம் பேர்) நேரடி​யாகப் பயனடை​வார்​கள். வேலை​வாய்ப்பு மற்​றும் சுயதொழில் வாய்ப்​பு​ களும் அதி​கரிக்​கும்.

சரக்கு போக்குவரத்து எளிதாகும்

நிலக்​கரி, இரும்​புத் தாது, சிமென்ட், எஃகு,வாக​னங்​கள் மற்​றும் உணவு தானி​யங்​கள் விரை​வாகக் கொண்டு செல்​லப்​படும். இதன் மூலம் கூடு​தலாக ஆண்​டுக்கு 76 மில்​லியன் டன்​கள் சரக்​கு​களைக் கையாள முடி​யும்.

எரிபொருள் பெருமளவில் சேமிப்பு

ரயில் போக்​கு​வரத்து அதி​கரிப்​ப​தால் நாட்​டின் தளவாடச் செலவு குறைந்​து, சுமார் 13 கோடி லிட்​டர் எரிபொருள் இறக்​குமதி தவிர்க்​கப்​படும்.

மேலும், 65 கோடி கிலோ கார்​பன் உமிழ்வு குறைக்​கப்​படும். இது 2.60 கோடி மரங்​களை நடு​வதற்​குச் சமமாகும்.

ரயில் பயண நேரம் குறையும்

புதிய வழித்​தடங்​கள் வருவதால், சென்னை மற்​றும் புறநகர்ப் பகு​தி​களில் இருந்து ஆந்​திரா மற்​றும் வடமாநிலங்​களுக்​குச் செல்​லும் ரயில்​களின் பயண நேரத்​தைக் குறைத்​து, ரயில் சேவை​யின் நம்​பகத்​தன்​மை​யை அதி​கரிக்​கும்​ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

================