Pollution Control Board on Vinayagar Chaturthi 2025 Idols Making Guidelines 
இந்தியா

இயற்கை பொருட்களால் விநாயகர் சிலைகள் : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Vinayagar Chaturthi 2025 Idols Making : விநாயகர் சிலைகளை உருவாக்க இயற்கை பொருட்​களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று, மாசு ​கட்​டுப்​பாடு வாரி​யம் அறிவுறுத்​தி​யுள்​ளது.

Kannan

விநாயகர் சதுர்த்தி :

Vinayagar Chaturthi 2025 Idols Making : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி(Ganesha Chaturthi Date) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அப்போது ஆயிரக் கணக்கான விநாயர்கள் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவர். பின்னர் இந்தச் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் :

விநாயகர் சிலைகள்(Ganesha Idols) தொடர்பாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரி​யம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்​பில், ”சுற்​றுச்​சூழலை பாது​காப்​ப​தில் தொன்​று தொட்டு சிறந்த மாநில​மாக தமிழகம் விளங்​கி வரு​கிறது. சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் பொது​மக்​களாகிய நமக்கு பெரிய கடமை இருக்​கிறது. நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதா​ரத்தை தரு​கின்​றன.

களிமண் சிலைகளை பயன்படுத்த வேண்டும் :

அவற்​றைப் பாது​காக்க, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் அரசு குறிப்​பிட்​டுள்ள இடங்​களில் மட்​டும் கரைத்​து, சுற்​றுச்​சூழலை​ பாது​காக்க வேண்​டும். பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்​டிக் மற்​றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்​றுச்​சூழலை பாதிக்​காத களி மண் போன்ற மூலப்​பொருட்​களால் மட்​டுமே செய்​யப்​பட்ட விநாயகர் சிலைகளை(Ganesha Idols Immersed) நீர் நிலைகளில் கரைக்க அனு​ம​திக்​கப்​படும்.

இயற்கை பொருட்களால் சிலைகள் :

சிலைகளின் ஆபரணங்​கள் தயாரிப்​ப​தற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்​கோல் போன்​றவற்​றைப் பயன்​படுத்​தலாம். சிலைகளை பளபளப்​பாக மாற்ற, மரங்​களின் இயற்கை பிசின்​களை பயன்​படுத்​தலாம். நீர் நிலைகள் மாசுபடு​வதை தடுக்​கும் வகை​யில், வைக்​கோல் போன்ற சுற்​றுச்​சூழலுக்கு உகந்த பொருட்​கள் மட்​டுமே சிலைகள் தயாரிக்க அல்​லது சிலைகள், பந்​தல்​களை அலங்​கரிக்க பயன்​படுத்த வேண்​டும்.

மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு கருதி மதுரை தவெக மாநாட்டு தேதி ஆகஸ்டு 21க்கு மாற்றம்

ரசாயன கலப்பில்லாத வண்ணங்கள் :

சிலைகளுக்கு வர்​ணம் பூசுவதற்கு நச்சு மற்​றும் மக்​காத ரசாயன சாயம், எண்​ணெய் வண்​ணப் பூச்​சுகளை கண்​டிப்​பாக பயன் படுத்​தக்​கூ​டாது. சிலைகளின் மீது எனாமல் மற்​றும் செயற்கை சாயத்தை அடிப்​படை​யாக கொண்ட வண்​ணப் பூச்​சுகளை பயன் படுத்​தக் ​கூ​டாது, சுற்​றுச்​சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்​கக்​கூடிய, நச்சு கலப்​பற்ற இயற்கை சாயங்​களை மட்​டுமே பயன்படுத்தப்பட வேண்​டும்” இவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

============