முடிவுக்கு வந்த போர், திறக்கப்பட்ட ஹோர்மூஸ்
ஈரான் அமெரிக்க இடையே நீடித்து வந்த போர் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்படானது ஏற்ப்பட்டது , குறிப்பாக வளைகுட நாடுகள் பெருமளவில் பாதிப்பை சந்தித்தது ,
இதனால் அனைத்து எரிப்பொருள் கப்பலகளையும் ஈரான் அனுமதிக்கமால் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது ,இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடானது ஏற்பட்டிருந்தது
ஈரான் அமெரிக்க இடையே போர் முடிவுக்கு வந்த நிலையில் ,ஹோர்மூஸ் நீரிணை கட்டுப்பாட்டை விலக்கி கொள்வதாக ஈரான் ஒப்பந்தம் மூலமாக உறுதியளித்திருந்தது
இந்தியா நோக்கி வரும் எண்ணெய் கப்பல்கள்
போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது
தற்போது விலை குறைப்பு இல்லை
போர் முடிவுக்கு வந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது நியாயமானதல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் விலை வெறும் 5.58 சதவீதமும், டீசல் விலை 6.23 சதவீதமும் மட்டுமே உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
பெட்ரோலிய துறை அமைச்சர்
பெட்ரோலிய விலை குறைப்பு குறித்து பேசிய அமைச்சர் ,அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் சுமார் ரூ.2.18 லட்சம் கோடி அளவிலான நஷ்ட ஈட்டுத்தொகையை சமாளித்து வருவதாகவும்,
கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக இருந்த கால கட்டத்தில் வாங்கப்பட்ட கையிருப்புகளை இன்னும் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நுகர்வோரை பாதுகாத்தது அரசு, ஹர்தீப் சிங் புரி
தொடர்ந்து நீடித்த போர் சூழல் மற்றும் எரிபொஇருளின் முக்கிய வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணைய முடக்கப்பட்ட காலத்திலும் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களில் இருந்து நுகர்வோரை அரசு பெரும்பாலும் பாதுகாத்து வந்தது என்று தெரிவித்தார்
கச்சா எண்ணெய் நெருக்கடியால் ஏற்பட்ட பெரும்பாலான தாக்கங்களை அரசே ஏற்றுக் கொண்டதாகவும், ஒரே ஒரு சில்லறை விற்பனை நிலையம் கூட எரிபொருள் இல்லாமல் காலியாக இல்லை.
நாட்டில் சுமார் 1.07 லட்சம் பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருவதாகவும் , இந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
==========================