Women's Reservation Bill could not be passed in Lok Sabha, did not receive two-thirds support vote held on it. google
இந்தியா

”மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஆதரவு 298, எதிர்ப்பு 230” : மக்களவையில் தோல்வி, நடந்தது என்ன?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 3ல் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால், மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

Kannan

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா உட்பட 3 மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

2023ல் சட்டம் நிறைவேற்றம்

2023ம் ஆண்​டு மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​படி, நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும். மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை 850 ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டது.

மூன்று மசோதாக்கள் அறிமுகம்

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்​களவையில் நேற்று முன்தினம் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் தொடக்​கத்​தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. மசோதா மீதான விவாதம் அன்றைய தினம் நள்​ளிரவு 1 மணி வரை நீடித்​தது. இரண்டாவது நாளாக நேற்றும் விவாதம் தொடர்ந்​தது.

எம்பிக்கள் ஆதரவு, எதிர்ப்பு

கனி​மொழி, ஆ.ராசா (தி​முக), சசி தரூர், ஜோதி​மணி (காங்​கிரஸ்), மிதுன் ரெட்டி (ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ்), ராஜீவ் ரஞ்​சன் சிங் (ஐஜத), கல்​யாண் பானர்ஜி (திரிண​மூல் காங்​கிரஸ்), ஸ்ரீ கிருஷ்ண தேவ​ராயலு (தெலுங்கு தேசம்),

டிம்​பிள் யாதவ் (சமாஜ்​வா​தி), ஹர்​சிம்​ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேம​மாலினி (பாஜக) உள்​ளிட்ட எம்​.பி.க்​கள் மசோ​தாவுக்கு ஆதர​வாக​வும், எதிர்ப்​பாக​வும் பல்​வேறு கருத்​துகளை முன்​வைத்​தனர்.

மத்திய அமைச்சர்கள் பதில்

உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்கு மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பதில் அளித்​தனர்.

பிரதமர் மோடி வேண்டுகோள்

மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மீதான வாக்​கெடுப்பை முன்​னிட்டு எம்பிக்களுக்கு பிரதமர் மோடி வேண்​டு​கோள் விடுத்​தார். ‘மகளிர் இடஒதுக்​கீடு விஷ​யத்​தில் கடந்த 40 ஆண்​டு​களாக அரசி​யல் செய்​யப்​பட்டு வந்​தது.

சுதந்​திரம் பெற்று பல ஆண்​டு​கள் ஆனபிறகும், முடிவு எடுக்​கும் விஷ​யத்​தில் மகளிருக்கு குறைந்​த​பட்ச பிர​தி​நி​தித்​து​வம்​கூட தரப்​பட​வில்​லை.

உங்​களது தாய், சகோ​தரி, மனை​வி, மகள் ஆகியோரை நினைத்​துப் பார்த்​து, மகளிர் இடஒதுக்​கீடு மசோதா விஷ​யத்​தில் மனசாட்​சிப்​படி முடிவு எடுக்க வேண்​டும்.

மகளிருக்கு அதி​காரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்​துள்​ளது. எனவே, அவர்​களுக்​கான புதிய வாய்ப்​பு​களை பறிக்​காதீர்​கள்.

தயவுசெய்து உரிய பரிசீலனை செய்​து, முழுஉணர்​வுடன் முடிவு எடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

அமித் ஷா விளக்​கம்

மக்​களவை​யில் மசோதா குறித்து உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். தொகுதி மறுசீரமைப்​பின் முடி​வில் தமிழகம் உள்​ளிட்ட தென் மாநிலங்​களுக்கு எத்​தனை தொகு​தி​கள் அதி​கரிக்​கும் என்ற பட்​டியலை​யும் அவர் வெளி​யிட்​டார்.

தொகுதி மறுசீரமைப்பு காரண​மாக தென் மாநிலங்​களுக்கு அதிக இழப்பு ஏற்​படும் என்று குற்​றச்​சாட்டு எழுந்த நிலை​யில், இந்த பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது.

மக்களவை இடங்கள் 850

மறு​வரையறை மூலம் தொகு​தி​கள் எண்​ணிக்கை 850 ஆக அதி​கரிக்​கப்​படும்​போது எந்​தெந்த மாநிலங்​களுக்கு எவ்​வளவு தொகு​தி​கள் அதி​கரிக்​கும் என்​பது குறித்​தும் விளக்​கம் அளித்​தார்.

தமிழகத்துக்கு 59 எம்பிக்கள்

‘‘தமிழகத்​துக்கு தற்​போது 39 எம்​.பி. தொகு​தி​கள் உள்ள நிலை​யில் தொகுதி மறு​வரையறைக்கு பின்​னர் இந்த எண்​ணிக்கை 59 ஆக உயரும்.

இதே​போல, எம்​.பி. தொகு​தி​கள் எண்​ணிக்கை கேரளா​வில் 20-ல் இருந்து 30 ஆகவும்,

ஆந்​தி​ரா​வில் 25-ல் இருந்து 38 ஆகவும், கர்​நாட​கா​வில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும்.

தொகுதி மறு​வரையறை​யால் தமிழகத்​துக்கு எந்​த​வித இழப்​பும் ஏற்​ப​டாது. மக்​களவை​யில் தமிழகத்​தின் பிர​தி​நி​தித்​து​வம் 7.18-ல் இருந்து 7.23 சதவீதம் ஆக அதி​கரிக்​கும்.

தொகுதி மறு​வரையறை ஆணை​யத்​தின் அறிக்கை நாடாளு​மன்​றத்​தால் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதல் பெற்ற பிறகே அமல்​படுத்​தப்​படும்.

2029-க்கு முன்பு வரை தற்​போது இருக்​கும் இடங்​களின் எண்​ணிக்​கை​யிலேயே அனைத்து தேர்​தல்​களும் நடை​பெறும்’’ என்று அமித் ஷா உறுதியளித்தார்.

மக்களவையில் வாக்கெடுப்பு

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 528 எம்​.பி.க்​கள் வாக்​களித்​தனர். மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 பேரும், எதி​ராக 230 பேரும் வாக்​களித்​தனர்.

மசோதா தோல்வி

மசோதா நிறைவேற மூன்​றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்​களவை​யில் 352 எம்​.பி.க்​களின் ஆதரவு இருந்​தால் மட்​டுமே மசோ​தாவை நிறைவேற்ற முடி​யும்.

ஆனால் 298 பேர் மட்டுமே ஆதர​வாக வாக்​களித்​த​தால் மகளிர் இடஒதுக்​கீடு மசோதா தோல்வி அடைந்​தது.

வாக்​கெடுப்​பின்​போது மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மட்​டுமே வாக்​கெடுப்​புக்கு விடப்​பட்​டது. மற்​ற 2 மசோ​தாக்​கள்​ மீதும்​ வாக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

=====