ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை:
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்தது.
இதையடுத்து இந்த வார தொடக்கத்தில் நேற்று சற்று விலை குறைந்ததால் பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். ஆனால் இன்று மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரத் தொடங்கியுள்ளதால், நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கவலை ஏற்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் பல ஆயிரம் ரூபாய் உயர்ந்த தங்கம்:
கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் ₹6,400 வரை உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்து வருவதால், நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் கவலை அதிகரித்து
ள்ளது
ஆகஸ்ட் 1 முதல் சவரனுக்கு ₹7,952 உயர்வு:
குறிப்பாக, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் தற்போது ₹14,250-க்கு விற்பனையாகி வரும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹1,14,000-ஐ எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹300-ம், ஒரு சவரனுக்கு ₹2,400-ம் உயர்ந்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹994 உயர்ந்துள்ளதுடன், ஒரு சவரனுக்கு ₹7,952 மற்றும் 10 கிராமுக்கு ₹9,940 அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் ஏற்றம்:
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், சென்னை சந்தையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்வு பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி சுமார் ₹216-க்கு விற்பனையான நிலையில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி ₹237 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹2,16,900-இல் இருந்து ₹2,37,398 ஆக அதிகரித்துள்ளது.
தங்கம் வாங்கும் பொதுமக்கள் கவலை :
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன.
குறிப்பாக, ஈரான் – இஸ்ரேல் மோதல், ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக தங்கம் மற்றும் வெள்ளி மீதான தேவை அதிகரித்து, விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
==============