உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்து நடை பயிற்சி
இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில், உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்ய நேரமில்லாதவர்கள் கூட, தினமும் முறையான விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பும், மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள்.
நாம் தினமும் விறுவிறுப்பாக நடக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமது உடலில் என்னென்ன நேர்மறையான ஆரோக்கிய மாற்றங்கள் அறிவியல் பூர்வமாக ஏற்படுகின்றன என்பதை நிமிடங்களின் அடிப்படையில் விரிவாகப் பார்க்கலாம்.
நிமிடங்களின் கணக்கில் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்
1 நிமிடத்தில் (அதிகரிக்கும் ரத்த ஓட்டம்)
நடைப்பயிற்சியைத் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே, தசை நார்களுக்குத் தேவையான ஆக்சிஜனை தடையின்றி கொண்டு சேர்க்க இதயத் துடிப்பும், உடலில் ரத்த ஓட்டத்தின் வேகம் சீராக அதிகரிக்கத் தொடங்குகிறது.
5 நிமிடங்களில் (மனநிலை மேம்படும்)
தொடர்ந்து 5 நிமிடங்கள் நடக்கும்போது, மூளையில் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் 'எண்டோர்பின்கள்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, நம்முடைய மனநிலை சட்டென்று புத்துணர்ச்சியடைகிறது.
10 நிமிடங்களில் (மன அழுத்தம் குறையும்)
பத்து நிமிட நடைப்பயிற்சி, உடலில் மன அழுத்தத்தை உண்டாக்கும் 'கார்டிசோல்' ஹார்மோனின் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது. இதனால் அன்றாடப் பதற்றங்கள் நீங்கி மனம் அமைதியடைகிறது.
15 நிமிடங்களில் (ரத்த சர்க்கரை கட்டுப்பாடு)
பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து நடப்பது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக்க உதவுகிறது.
தசைகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நேரடியாக ஆற்றலாகப் பயன்படுத்துவதால், இன்சுலின் சுரப்பு மேம்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த பலனைத் தருகிறது. (முக்கியமாக உணவுக்குப் பின் நடப்பது நலம்).
30 நிமிடங்களில் (கொழுப்பு எரிப்பு வேகம் அதிகரிக்கும்)
அரை மணி நேரத்தை நடைப்பயிற்சி எட்டும்போது, உடல் கலோரிகளை எரிக்கும் வேகத்தை அதிகப்படுத்துகிறது.
கார்போஹைட்ரேட்டுகளைத் தாண்டி, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை முதன்மை ஆற்றலாக உடல் பயன்படுத்தத் தொடங்குவதால் கொழுப்பு எரியும் வேகம் கணிசமாக அதிகரிக்கிறது.
45 நிமிடங்களில் (தீவிரம் மன உளைச்சல் குறையும்)
நாற்பதைந்து நிமிடங்கள் வரை தொடர்ந்து நடக்கும்போது, மூளையில் 'அதிகப்படியான சிந்தனை' குறைந்து, நீண்ட நாள் மன உளைச்சல் மற்றும் தீவிர மன அழுத்தம் போன்றவை பெருமளவு கட்டுக்குள் வந்து உடலும் மனமும் இலகுவாக மாறுவதை உணர முடியும்.
60 நிமிடங்களில் (மூளையின் செயல்பாடு மேம்படும்)
முழுமையாக ஒரு மணி நேரம் (60 நிமிடங்கள்) நடைப்பயிற்சியை நிறைவு செய்யும்போது, மூளையில் 'டோபமைன்' சுரப்பு தூண்டப்பட்டு, ஒட்டுமொத்த செயல்பாடும் நினைவாற்றலும் பல மடங்கு கூர்மையடைகிறது.
இது புதிய மூளைச் செல்கள் உருவாகவும், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வழிவகுக்கிறது.
ஆரோக்கியத்துடன் வாழ
தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ வெறும் 60 நிமிடங்கள் ஒதுக்கி விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வதை ஒரு வழக்கமாக மாற்றிக் கொண்டால், எவ்வித மருத்துவச் செலவுகளும் இன்றி நீண்ட ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்பது உறுதி!
=====