Good news for Ayyappa devotees!!! Sabarimala Temple to Open Today for Onam Festival Google
ஆன்மிகம்

ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்!!! ஓணத்தையொட்டி சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு...

வருடா வருடம் ஓணம் பண்டிகை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐந்து நாட்கள் ஓணம் சிறப்பு வழிபாடு நடைபெறும் ...

NARENDRAN K

திருவோணம் கொண்டாட்டம் :

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் நடை இன்று (ஆகஸ்ட் 24) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

ஓணம் சிறப்பு பூஜைகளுக்காக தொடர்ந்து 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் கோயில் நடை திறந்திருக்கும்.

திருவோண நாளில் ஓண சத்யா :

இந்த ஆண்டு திருவோணம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஓண சத்யா வழங்கப்பட உள்ளது.

இதனால் ஓணம் தினத்தில் சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடை அடைப்பு:

ஓணம் தொடர்பான சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும்.

எனவே ஓணம் நாட்களில் சபரிமலை செல்ல திட்டமிடும் பக்தர்கள் தங்களது தரிசன ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்வது முக்கியம்.

இந்த ஆண்டு தேவஸ்வம் போர்டே வழங்கும் ஓண சத்யா :

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்களுக்கு ஓண சத்யா வழங்கப்படுவது வழக்கம். பொதுவாக இதற்கான உணவு ஏற்பாடுகளை தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட அமைப்புகள் மேற்கொண்டு பக்தர்களுக்கு உணவு வழங்கி வந்தனர்.

ஆனால், இந்த ஆண்டு சிறப்பு ஏற்பாடாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பிலேயே பக்தர்களுக்கு ஓண சத்யா வழங்கப்பட உள்ளது. சபரிமலைக்கு ஓணம் நாட்களில் வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாரம்பரிய முறையில் ஓண சத்யா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் :

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பம்பை, நிலக்கல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப போக்குவரத்து சேவைகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

பக்தர்கள் சிரமமின்றி சபரிமலை சென்று தரிசனம் செய்யவும், தரிசனம் முடிந்து பாதுகாப்பாக திரும்பவும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.