Tamils ​​are eager to visit the Himalayas, as depicted in literature, full details about the spiritual pilgrimage google
ஆன்மிகம்

தமிழக பக்தர்கள் நேபாளம் செல்லும் காரணம்? : வைணவம், சைவ ஆன்மிக பயணம், இமயமலை தரிசனம், மானசரோவர் யாத்திரை..!

தமிழர்கள் ஆர்வத்தோடு இமயமலை தரிசனம் செய்யக் காரணம், இலக்கியங்களில் காணப்படும், ஆன்மிக யாத்திரை, முழு விவரம்...!

Kannan

தமிழர்களின் இமயமலை பயணம்

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல ஆளுமைகள் இமயமலை மற்றும் நேபாளப் பயணம் மேற்கொள்வது ஆன்மீகத் தேடலாக இருக்கிறது. தமிழகத்தில் ஆயிரக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் பல்லாயிரக் கணக்கான திருக்கோவில்கள் உள்ளன.

தமிழகமும் இமயமலையும்

அப்படி இருந்தும் தமிழக பக்தர்கள் ஆயிரக் கணக்கான மைல்களை கடந்து, இயற்கை சவால்களை எதிர்கொண்டு, நேபாளத்திற்கு புனித பயணம் போகிறார்கள்.

தமிழகத்திற்கும் - இமயமலைக்கும் இடையேயான பிணைப்பு இப்போது தொடங்கியது கிடையாது. பண்டை காலம் முதலே, இலக்கியங்களிலும், ஆன்மீக வரலாற்றிலும் இது பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

ஆன்மிக பூமி நேபாளம்

தமிழகத்தைச் சேர்ந்த இந்துக்களை நேபாள மண் ஈர்ப்பதற்கு ஆன்மிக, கலாச்சார காரணங்கள் இருக்கின்றன.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்கள்

வைணவ மரபை பின்பற்றுபவர்களின் ஆன்மீக லட்சியம் 108 திவ்ய தேசங்களையும் வாழ்நாளில் தரிசிப்பது. இவற்றில் 105 திருத்தலங்கள் பூமியிலும், 2 தலங்கள் (பரமபதம், திருப்பாற்கடல்) பூலோகத்தை கடந்தும் உள்ளதாக நம்பப்படுகிறது.

நேபாளத்தின் முக்திநாத்

இந்தியாவின் எல்லைக்கு வெளியே அமைந்துள்ள ஒரே ஒரு திவ்ய தேசம் நேபாளத்தின் முஸ்தாங் பள்ளத்தாக்கில் உள்ள முக்திநாத் மட்டுமே.

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். எனவே, இங்கிருக்கும் திருமாலின் ஆலயத்தில் புனித நீராடி சேவிப்பதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர்.

சைவர்களுக்கும் முக்கிய திருத்தலம் நேபாளம்

சிவபெருமானை வழிபாடும் இந்துக்களுக்கும் நேபாளம் ஒரு மிக முக்கிய ஆன்மிகத் தலம். இமயமலையில் உள்ள திருக்கைலாயத்தை ஏழாம் நூற்றாண்டிலேயே நாயன்மார்கள் பாடியுள்ளனர்.

பசுபதிநாதர் ஆலயம் - ஜோதிர்லிங்கம்

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் ஆலயம் உலகப் புகழ் பெற்ற 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கு இணையான பெருமை கொண்டது.

காசி யாத்திரை, பசுபதிநாத் தரிசனத்தோடு தான் முடியும் என்பது,

நேபாளத்தின் 'குமாரி' வழிபாடு

நேபாளத்தில் தனித்துவமான வழிபாடு குமாரி வழிபாடு ஆகும். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை தேர்வு செய்து, யப்பட்டு, குறிப்பிட்ட காலம் வரை தெய்வத்தின் கருதி அவரை மக்கள் வழிபடுவர். அந்த சிறுமி பூப்பெய்திய பின்னர் புதிய குமாரி தேர்வு செய்யப்படுவார்.

தமிழகத்தின் வடதிசை இமயம்

வடதிசை எல்லை இமயம் என்று புறநானூறு கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் பல இமயமலையை போற்றியுள்ளன. எனவே, மக்கள் மனிதல் இறைவன் உறையும் இடம் இமயமலை என்பது பதிந்து இருப்பதால், பலரும் இமயமலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நேபாளத்தில் உள்ள புகழ் பெற்ற தலங்கள்

பசுபதிநாத் கோயில்: காத்மாண்டுவில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிவ தலம். இது நேபாளத்தின் மிக புனிதமான கோயிலாகக் கருதப்படுகிறது.

முக்திநாத் கோயில்: இமயமலைப் பகுதியில் சுமார் 3,760 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள விஷ்ணு தலம். இது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

ஜானகி மந்திர்: ஜனக்பூரில் அமைந்துள்ள இக்கோயில் சீதா தேவி பிறந்த இடமாகப் போற்றப்படுகிறது.

புத்தநீலகண்டா கோயில்: காத்மாண்டுவில் உள்ள இந்த கோயிலில், ஒரே பெரிய கருங்கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை தண்ணீரில் மிதக்கும் நிலையில் காட்சியளிக்கிறது.

லும்பினி: கௌதம புத்தர் அவதரித்த உலகப் புகழ்பெற்ற புனித பூமி. இங்குள்ள மாயாதேவி கோயிலும், அசோகர் தூணும் முதன்மையானவை.

திருக்கைலாய யாத்திரை’

இந்துக்களின் புனிதப் பயணமாகக் கருதப்படும் திபெத்தின் ‘திருக்கைலாய யாத்திரையின் நுழைவு வாயிலே நேபாளம் தான்.

நேபாளம் முழுக்க முழுக்க மலை சார்ந்த ஒரு நாடாகும். முக்திநாத் செல்வதற்கு ஏறக்குறைய மூன்று ஹெலிகாப்டர்கள் மாற வேண்டியது இருக்கும்.

ஜூலை மாதத்தில் நேபாளம் செல்வது சற்று பாதுகாப்பானது. காரணம் அப்போது மழையும், பனியும் குறைவாகவே இருக்கும்.

சீன கட்டுப்பாட்டு பகுதியில் கைலாய மலை

கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி திபெத் தன்னாட்சிப் பகுதியில், சீனக் கட்டுப்பாட்டில் உள்ள இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளன. கைலாய மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,638 மீட்டர் உயரத்தில் உள்ளது.

சிவனின் இருப்பிடம் கைலாயம்

இது சிவபெருமானின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. ஆனால் கைலாயத்தின் ஆன்மிக முக்கியத்துவம் இந்து மதம் மட்டுமின்றி, பௌத்தம், சமண சமயத்தை பின்பற்றுவோருக்கும் புனிதமானதாக கருதப்படுகிறது.

சிந்து, சட்லஜ், பிரம்மபுத்திரா மற்றும் கர்ணாலி போன்ற முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இமயமலையில் அமைந்துள்ளன. மானசரோவர் ஏரியும் இந்து சமயத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

நேபாளம் வழியாக கைலாயம்

நேபாளத்தின் ஹும்லா – ஹில்சா வழியாக யாத்ரீகர்கள் திபெத்தின் டக்லாகோட் பகுதிக்கு சென்று, பின்னர் கைலாயம்–மானசரோவர் நோக்கிய யாத்திரை தொடர்கின்றனர். இந்த பாதை முழுவதும் உயரமான மலைப் பகுதிகள் வழியாக செல்வதால், சாதாரண சுற்றுலாவுடன் ஒப்பிடும் போது உடல்தகுதி மிகவும் முக்கியம்

இந்தியா வழியாக செல்லும் இரண்டு பாதைகள்

இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ஏற்பாடு செய்கிறது.

ஒன்று லிபுலேக் கணவாய் - உத்தராகண்ட் - இந்த வழித்தடத்தில் நீண்ட தூர மலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். பயணத்துக்கு சுமார் 22 நாட்கள் வரை ஆகும்.

நாதுலா கணவாய் - சிக்கிம் - இந்த வழித்தடத்தில் மலைப்பாதையில் செல்ல வேண்டிய தூரம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், மொத்த யாத்திரைக் காலம் சுமார் 21 நாட்கள் வரை ஆகும்.

மேலும், உயரமான மலைப்பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மருத்துவப் பரிசோதனைகளில் தேர்ச்சிப் பெற வேண்டும். அனைத்து யாத்ரீகர்களும் குழுவாகவே பயணம் செய்ய வேண்டிய கட்டுப்பாடுகளும் உள்ளன.

பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஆன்மிகம் அனைத்தையும் மீறி வழிபாட்டில் ஈர்க்கிறது. இதன் காரணமாகவே தமிழர்கள், எப்படியாவது ஒருமுறை இமயமலை சென்று விட்டு வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள்.

=======================