Tiruvannamalai Annamalaiyar Maha Karthigai Deepam 2025 Darshan Benfits in Tamil : திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா மிகச்சிறப்பு வாய்ந்தது. இங்கு ஏற்றப்படும் மகா தீபத்திற்கு கார்த்திகை விளக்கீடு, ஞான தீபம், சிவ ஜோதி, பரஞ்சுடர் என்ற பெயர்களும் உண்டு. அதன் சிறப்புகளை பார்க்கலாம்.
மகா தீபத்தை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
* திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
* திருவண்ணாமலையை பார்த்து ‘நமசிவாய’ என்று சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
* மகா தீபம் ஏற்றப்படும்போது மலையின் உள்பகுதியில் ஒரு ஒலியை கேட்டதாக ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் கூறி இருக்கிறார்கள்.
* கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு கிரிவலம் வந்தால் ஆன்ம பலம் அதிகரிக்கும்.
* தீபத் திருநாளில் 5 முறை கிரி வலம் வர பாவங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும்.
* தீபம் ஏற்றப்படும்போது, ‘தீப மங்கல ஜோதி நமோ நம’ என்ற பாடலை பாடவேண்டும்
* கார்த்திகை தீபத்தை தரிசிக்க சித்தர்கள் வருகை தருகிறார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் அவர்கள், தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகை தைலத்தை சேர்த்து விடுவதாக சொல்கிறார்கள். இதனால் தீய சக்திகள் அழியும்.
* கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவர்க்கு 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* கார்த்திகை தீப காட்சியை நேரில் தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
திருவண்ணாமலை மகா தீப சிறப்புகள்
* மலையுச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையில் 2000 லிட்டர் நெய் பிடிக்கும். தீப ஒளியானது சுற்று வட்டாரத்தில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்குத் தெரியும். இது 11 நாட்கள் தொடர்ந்து எரியும்.
* கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகை தீபங்கள் ஏற்றப்படும்.
* திருவண்ணாமலையில் கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை. .
* அதிகாலை கோயிலில் பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை சொர்ண பைரவர் சன்னிதியில் வைத்து விடுவார்கள். அதை மாலையில் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று மகாதீபத்தை ஏற்றுவார்கள்.
* மகா தீபம் ஏற்றப்பட்டதும், ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு அர்த்தம், ‘இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து மனதில் ஆன்ம ஜோதியை காண்பது’
* சிவபெருமான் கார்த்திகை தீப நாளில் அக்னியில் நடனமாடுவதாக ஐதீகம். இந்த நடனத்தை ‘முக்தி நடனம்’ என்று அழைப்பர்.
================