திருப்பதி பிரம்மோற்சவம்
உலகப் புகழ்பெற்ற திருப்பதி-திருமலை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது பிரம்மோற்சவம். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்க, காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார்.
8ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற இருக்கின்றன. முதல் பிரம்மோற்சவத்திற்காக வரும் 8ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 14-ம் தேதி அங்குரார்பன நிகழ்ச்சி நடைபெறும்.
15ம் தேதி கொடியேற்றம்
இதனை தொடர்ந்து 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து காலை 8 - 10 மணி, இரவு 7-9 வரை வாகன சேவைகள் நடைபெறும்.
19ம் தேதி கருடசேவை
19-ம் தேதி கருட வாகன சேவை மட்டும் அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. 22-ம் தேதி தேர்த் திருவிழாவும், 23-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவும் பெறுகிறது.
15ம் தேதி மாலை ஆந்திர அரசு தரப்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணிக்கையாக வழங்க உள்ளார்.
அக்டோபரில் நவராத்திரி பிரம்மோற்சவம்
இதையடுத்து, அக்.12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடத்தப்பட உள்ளது.
விழாக்கோலம் பூணும் திருமலை
பிரம்மோற்சவ விழா நெருங்குவதை முன்னிட்டு, பல இடங்களில் தோரணங்கள், அலங்கார வளைவுகள் பொருத்தப்பட்டு வருகிறது. மாட வீதிகளில் ஜெர்மன் ஷெட்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏழுமலையான் கோயில் முகப்பு கோபுரத்தில் மராமத்து பணிகளும், வெள்ளை அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
==========