2026 Assembly Elections: The Complete List of Seeman's Released Election Manifesto! source : google
தமிழ்நாடு

”தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் : விவசாயிகளுக்கு பென்ஷன், மதுக்கடைகள் மூடல்” : நாம் தமிழர் தேர்தல் அறிக்கை!

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சி நடைபெறும்.

S Kavitha

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளின் லிஸ்ட்!

  • தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சி நடைபெறும்.

  • முதன்மையாக 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்

  • மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகமாக மதுரையும், தொழில்நுட்பத் தலைநகராக சென்னையும், தொழில் தலைநகராக கோவையும், தமிழர் மெய்யியல் தலைநகராக கன்னியாகுமரியும், நிர்வாகத் துறை தலைநகராக திருச்சியும் உருவாக்கப்படும்.

  • மேலும், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை திருச்சிக்கு மாற்றியமைக்கப்படும்.

  • தமிழகத்தில் படிக்காதவரே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

  • ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி முறை கல்வி வழங்கப்படும்.

  • தமிழகத்தில் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்.

  • பல கோடி ரூபாயில் பனைத்திட்டம் செயல்படுத்தப்படும்.

  • மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சட்ட மாற்றங்களுக்காக பாடுபடுதல்

  • 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

  • ஓராண்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.

  • குடிநீர் விற்பனைக்கு தடை

  • 2,300 டிஎம்சி மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க திட்டங்கள்

  • மாநில அரசு வசூலிக்கும் வரிகளில், மத்திய அரசுக்கு 25 சதவீதம், மாநில அரசுக்கு 75 சதவீதம் வழங்க வலியுறுத்தப்படும்.

  • தமிழகத்தில் வாக்குப்பதிவை கட்டாயமாக்கும் வகையில், நூறு சதவிகிதம் வாக்களித்தற்கான அரசு சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் அரசு சலுகைகள் வழங்கப்படும்.

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில், வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்படும்.

  • மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி கொண்டு வரப்படும்.

  • நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்காக தனித் தொகுதி.

  • விளையாட்டுத் துறைகளில் சமமான வாய்ப்பு வழங்கப்படும்.

  • மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அமைச்சகம், மற்றும் உள்ளாட்சியில் ஐந்து சதவிகித இட ஒதுக்கீடு.