2027 Census: Governor appeals to all citizens to participate and extend full cooperation. google
தமிழ்நாடு

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு : மக்கள் கலந்து கொண்டு, முழு ஒத்துழைப்பு தர ஆளுநர் வேண்டுகோள்..!

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Rohini

மக்கள் தொகை கணக்கெடுப்பு

2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஆன்லைன் மூலம் தொடங்கியிருக்கிறது , சுயமாக ஆன்லைன் மூலமாகவும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்,

இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவான, துல்லியமான மற்றும் நம்பகமான மக்கள்தொகை, சமூக, பொருளாதார மற்றும்

வீட்டுவசதித் தரவுகளை உருவாக்கும் நோக்கில், நாட்டின் மிக முக்கியமான தேசிய தரவு சேகரிப்புப் பணிகளில் ஒன்றான 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது

தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். சுயவிவரக் கணக்கெடுப்புப் பணிகள் 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையிலும் நடைபெறும்.

மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்புத் தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும். இந்நிகழ்வில்,

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டமிடலுக்கு நம்பகமான தரவுகளை வழங்கும் ஒரு முக்கிய தேசியப் பணியே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்காக, ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை அளித்து, கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுயவிவரக் கணக்கெடுப்பைத் தேர்வு செய்யாத குடும்பங்கள், 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரை நடைபெறும்.வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் போது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்களால் கணக்கெடுக்கப்படுவார்கள்.

முழு மனதுடன் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும்

ஆளுநர் அவர்கள், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒரு பகிரப்பட்ட தேசியப் பொறுப்பாகக் கருதி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியில் ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும் என்று மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டு மக்களின் செயல்மிகு ஒத்துழைப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கும், மாநில மற்றும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான தரவுத்தளத்தை வலுப்படுத்துவதற்கும் கணிசமாகப் பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-==========================