பதவியேற்பு
தமிழகத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டமாநிலங்களவை இன்று பதவியேற்று கொண்டனர். அதன்படி தமிழக்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.
குடியரசு துணை தலைவர் பதவி பிரமாணம்
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட திருச்சி சிவா (திமுக) - ஐந்தாவது முறை,
ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக),தம்பி துரை (அதிமுக )அன்புமணி ராமதாஸ் (பாமக),கிறிஸ்டோபர் மணிக்கம் (காங்கிரஸ்),எல்.கே. சுதீஷ் (தேமுதிக), ஆகியோர் இன்று குடியரசு துணை தலைவர் முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர்.
ஐந்தாவது முறையாக பதவி வகிக்கும் திருச்சி சிவா
அதனபடி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஐந்தாவது முறையாக முறையாக மீண்டும் பதவி ஏற்று கொண்டார் எம் பி திருச்சி சிவா அவர்கள்
பதவி ஏற்று கொண்ட எம்பிகளின் விவரம்
திமுக சார்பில் திருச்சி சிவா - ஐந்தாவது முறையாக தேர்வு.
அதைபோல் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் என்பவர் திமுக சார்பிலும் முதன்முறையாக ராஜ்யசபா எம்பியாகினார்.
தம்பிதுரை ,அதிமுக சார்பிலும் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,கிறிஸ்டோபர் மணிக்கம் காங்கிரஸ், எல்.கே. சுதீஷ் தேமுதிக சார்பாகவும் பதவி ஏற்று கொண்டனர்.
முதல் முறை மாநிலங்களவை உறுப்பினர்
மாநிலங்களவை உறுப்பினர்களாக முதல் முறையாக செல்பவர்களாக ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் மணிக்கம் காங்கிரஸ், எல்.கே. சுதீஷ் தேமுதிக சார்பாகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
எல்.கே. சுதீஷிற்கு தேமுதிக துண்டுடன் பதவியேற்க மறுப்பு
தேமுதிக துண்டுடன் பதவியேற்க சென்ற எல்.கே. சுதீஷிடம் கட்சித் துண்டை கழற்றி வைத்துவிட்டு வருமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.அதனபடி தேமுதிக துண்டு இல்லாமல் பதவியேற்று கொண்டார் .