ADMK Chief Edappadi Palanisamy About Karur Stampede Incident in Dharmapuri Election Campaign 
தமிழ்நாடு

கரூர் சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

EPS on Karur: எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தருமபுரி அருகே பரப்புரை மேற்கொண்ட அவர், கரூர் உயிரிழப்பிற்கு அரசு தான் காரணம் என விமர்சித்துள்ளார்.

Bala Murugan

தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி :

Edappadi Palanisamy About Karur Stampede Incident : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என கூறி​னார். மேலும் கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு அரசு போதிய பாது​காப்பு ஏற்​படுத்​தித் தராதது​தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்

அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது தமிழக அரசின் கடமை. முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் காவல் துறை உள்​ள​தால், கரூர் சம்​பவத்​துக்கு அவர்​தான் பொறுப்​பேற்க வேண்​டும். மக்​கள் கேள்வி​களுக்​கும் அவர்​தான் பதில் கூற வேண்​டும். தற்​போது ஒரு நபர் ஆணைய விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது.அவர்​களின் விசா​ரணை முடிவை பொறுத்​திருந்து பார்ப்​போம்.

ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு மற்றவர்கள் பேசக்கூடாது

ஒரு நபர் ஆணை​யம் அமைக்​கப்​பட்ட பிறகு ஐஏஎஸ் அதி​காரி​கள், காவல் துறை உயர் அதி​காரி​கள் ஆகியோர் இந்த விவ​காரம் தொடர்​பாக பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கடந்த அதி​முக ஆட்​சி​யின்​போது திமுக-வுக்கு பல கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், தற்​போது திமுக அரசு எதிர்க்​கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் அரசி​யல் செய்​கிறது என்று விமர்சித்தும் ஆட்​சி, அதி​காரம் இருக்​கிறது என்று ஆடி​னால் காணா​மல் போய்​விடு​வீர்​கள் என்று கூறினார்.

இடதுசாரிகள் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர்

இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டோம் என கூறும் முதல்​வர் ஸ்டா​லின், கரூர் சம்​பவத்​தின் மூலம் தேசிய அளவில் தமிழகத்​துக்கு தலைகுனிவை ஏற்​படுத்தி விட்​டார் என்றும் விசிக, இடது​சாரி கட்​சிகள் மனசாட்​சியை இழந்து விட்​டனர் என்று பதிலளித்தார். திருச்​சி, விழுப்​புரத்​தில் அவர்​கள் மாநாடு நடத்த அனு​மதி கேட்ட இடத்​துக்கு திமுக அரசு அனு​மதி தரவில்லை என்று அப்​போது குற்​றம்​சாட்​டினர். ஆனால், தற்​போது கரூர் சம்​பவத்​தில் அரசுக்கு ஆதர​வாக நிற்​கின்​றனர் என்று கேள்வி எழுப்பினார்.

பல்லாயிரம் கோடி முறைகேடு

டாஸ்​மாக்​ என்றும் மதுபான முறை​கேடு மூலம் பல்​லா​யிரம் கோடி முறை​கேடு நடந்​துள்​ளது. மீண்​டும் அதி​முக அரசு அமைந்​தவுடன் இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தப்​படும் என்று உறுதியளித்த அவர், அதே​போல, திமுக ஆட்​சி​யில் முடக்​கி​வைத்​துள்ள திட்​டங்​கள் அனைத்​தும் மீண்​டும் அமல்​படுத்​தப்​படும். அதற்​கு பொது​மக்​கள் அதி​முக-வை ஆதரிக்க வேண்​டும் என்று கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க : ’விஜய் மீது வழக்கு போட ஏன் அச்சம்?’: திமுக அரசுக்கு திருமா கேள்வி

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள்

முன்​ன​தாக, கூட்​டம் தொடங்​கும்​போது கரூர் சம்​பவத்​துக்கு 2 நிமிட மவுன அஞ்​சலி செலுத்​தப்​பட்​டதை அடுத்து கூட்​டத்​தில், முன்​னாள் அமைச்​சர்​கள் கே.பி.அன்​பழகன், முல்​லை​வேந்​தன் மற்​றும் அதி​முக நிர்​வாகி​கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்​து​ கொண்​டனர். இதில் எடப்பாடி பழனிசாமி கூறிய அனைத்து கருத்துகளுக்கும் பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இவர் பேசிய அந்ந பரபரப்பு காணொளியை நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து டிரெண்ட் செய்தும் விமர்சித்தும் வருகின்றனர்.