தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்
தவெக அரசு ஆட்சி அமைத்த பிறகு முதல் ப்டஜெட் தாக்கல் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் , இன்று வே2026மற்Rum 2027 ஆம் ஆண்டிற்கான வேளாண பட்ஜெட் அமைச்சர் வினோத அவர்களால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது
100 சதவீதம் பயிர்காப்பீடு, 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உண்வு உற்பத்தி
சட்டப்பேரையில் வேளாண் பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் வினோத், வேளாண்துறை அதிக சவால்களை சந்தித்து வருவதாகவும் ,வேளாண் விளைபொருட்களுக்கு 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் ,
அதன்படி 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்தார்
என்நினோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீர் பாசன முறைக்கு நடவடிக்கை
இந்த ஆண்டு ஏற்ப்பட்டுள்ள சூப்பர் எல்நினோ தாக்கத்தா்ல் காலநிலையில் வேறுபாடாது நிகழ்ந்துள்ளது ,
இந்த சூழலில் , எல்நினோவால்12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் அதனை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்
பயிர்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்படும்
பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.648 கோடி ஒதுக்கப்ட்டுள்ளதாகவும் , 38 மாவட்டங்களில் ரூ.648 கோடியில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் தெரிவித்திருக்கிறார்
டெல்டா மாவட்டங்களில் 10 கோடி செலவில் வாய்க்கால்கள் தூர்வாரப்படும்
வேளாண் பட்ஜெட்டில் ,விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் , டெல்டா மாவட்டங்களில் ரூ.10 கோடி செலவில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும்,
விவசாயிகளின் நலனுக்காக ரூ.4 கோடியில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உழவு செயலி , வேளாண்மையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது
மேலும் ,வேளாண் பட்ஜெட்டில் , 2021-க்கு பிறகு ஏ.ஐ, உழவு செயலி ஆகியவை வேளாண்மையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்
===============================