Annamalai We The Leaders Tiruchendur Meeting Cancelled August Plan 2026 google
தமிழ்நாடு

அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ : திருச்செந்தூர் பொதுக்கூட்டம் திடீர் ரத்து : ஏன் தெரியுமா?

அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் ஜூலை 26 அன்று திருச்செந்தூரில் நடக்கவிருந்த பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Kavitha prasanna

Annamalai We The Leaders Tiruchendur Meeting Cancelled August Plan 2026

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெறவிருந்த மாபெரும் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் பின்னணி

பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த ஜூன் 5 அன்று ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்குவதாக அறிவித்தார்.

50 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள்

இந்த அமைப்பில் சுமார் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த பிறகு, இதனை முறையாக ஓர் அரசியல் கட்சியாக மாற்றி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்ணாமலை ஏற்கனவே தனது அரசியல் இலக்கை தெளிவுபடுத்தியிருந்தார்.

அண்ணாமலையின் முதல் மாநாடு

இதற்கிடையே, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டியில் இந்த அமைப்பின் முதல் மாநாடு ‘போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு’ என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

திருச்செந்தூர் மாநாடு ரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பொள்ளாச்சி மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்த 6 மாதங்களுக்கு சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் போன்றவற்றை மையமாகக் கொண்டு தொடர் மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 26 அன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தற்காலிக ரத்து

ஆனால், தற்போதைய சூழலில் ஜூலை 26-ல் நடைபெறவிருந்த இந்தத் திருச்செந்தூர் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.

அடுத்து வரவிருக்கும் புதிய திட்டங்கள்

திருச்செந்தூர் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டாலும், அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட கூட்டத்திற்கு மாற்றாக, வரும் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த மாபெரும் சமூக நல நிகழ்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளன.

ஆகஸ்டில் மாநாடு: தேதி மற்றும் இடம்

இந்தச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் தடையின்றி நடைபெறும் தேதி மற்றும் துல்லியமான இடம் குறித்த முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் தெரிவித்துள்ளது.

மேலும் "மாற்றத்தை நோக்கி நம்மோடு பயணிக்கும் அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றி" மாறுவோம்..மாற்றுவோம் என்று அந்த அறிவிப்புப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

=====