Chennai and its suburbs flood with rain, DMK govt spent crores of rupees had no effect 
தமிழ்நாடு

ரூ.5,201 கோடி எங்கே?, வெள்ளத்தில் சென்னை : நிர்வாகத்தில் படுதோல்வி

டிட்வா புயலை தொடர்ந்த மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. திமுக அரசின் பெருமிதமான பேச்சுகள், செலவிடப்பட்ட ஆயிரக்கணக்கான கோடிகள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

Kannan

மழை, வெள்ளம் - வழக்கமான பாதிப்பு

டிட்வா புயல் வலுவிழந்தாலும், அதன் தொடர்ச்சியாக தாழ்வு மண்டலம், தாழ்வுப்பகுதி, சென்னையை நீர்தேக்கம் போன்ற நிலைமைக்கு தள்ளின. இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்க, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மீட்புப் பணிகளுக்காக படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன

ரு.5,201 கோடி செலவு

சென்னையில் நான்கு ஆண்டுகளில் 1,144.5 கி.மீ நீளமுள்ள வடிகால்களை அமைக்க ₹5,201 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக மாநகராட்சியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு பருவமழைக்குப் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 87 இடங்களில் 85 இடங்கள் இப்போது 'அபாயகரமான ஆபத்து மண்டலத்தில்' இல்லை. அம்பத்தூர், மணலி, மாதவரம் மற்றும் திருவொற்றியூர் மண்டலங்கள் இவற்றில் அடையாளம் காட்டப்பட்டன.

வெள்ளத்தில் மூழ்கிய ரூ.5,201 கோடி

ஆனால், நிகழ்ந்தது என்ன? செலவிடப்பட்டதாக கூறப்படும் ₹5,201 கோடி என்ன ஆனது? சென்னை மீண்டும் ஒரு முறை வெள்ளத்தில் மூழ்கியது. ஆபத்தான இடங்களே இல்லை என்று அரசு கூறினாலும், தண்ணீர் தேங்கியது எப்படி?.

40 ஆண்டுகளாக அதே நிலைமை

40 ஆண்டுகளாக எதுவும் மாறவில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குச் சென்றார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மு.க. ஸ்டாலினும் அதையே செய்தார். இப்போது உதயநிதி அதே புகைப்படங்களை மீண்டும் செய்கிறார். வெவ்வேறு தலைமுறை, ஆனால் அதே தோல்வி.

சிங்கார சென்னை - சாத்தியம் இல்லையா?

“சிங்கார சென்னை” என்ற வாக்குறுதி இன்னமும் தொலைவில் இருப்பதை உணர்த்துகிறது. சென்னை வெள்ளம் விதியால் அல்ல, அரசின் தோல்வியால். அதை மக்களும், நகரமும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.

கார்பந்தயம் நடத்த சென்னையில் ஒரே இரவில் புதிய சாலைகள் உருவாகின. முதல்வரின் தந்தையை கௌரவிக்கும் நினைவுத் தூணுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிட அரசு தயாராக இருந்தது.

மழைநீரில் மாயமான மக்கள் பணம்

ஆனால் வெள்ளத்தைத் தாங்கும் நகரத்தின் முதுகெலும்பான புயல் நீர் வடிகால்கள் பற்றி அக்கரையும் இல்லை, அவசரமும் காட்டப்படவில்லை.

மழைநீரை விட 4,000 கோடி எப்படி வேகமாக வடிந்து, மாயமானது என்பது தான் மக்களின் கேள்வி.

வெற்று புள்ளி விவரங்கள்

2022ம் ஆண்டில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு சென்னையின் மழைநீர் வடிகால் பணிகளில் 95% நிறைவடைந்ததாக நம்பிக்கையுடன் அறிவித்தார்.

2023 ஆம் ஆண்டில், சென்னை மேயர் பிரியா அந்த எண்ணிக்கையை 97% ஆக உயர்த்தினார்.

அதே ஆண்டின் பிற்பகுதியில், அமைச்சர் கே.என். நேரு இந்த வரம்பை 98% ஆக உயர்த்தினார்.ஆனால், 2024ம் ஆண்டில், அதே வடிகால் பணிகளில் 30% இன்னும் நிலுவையில் இருப்பதாக முதலமைச்சரே அறிவித்தார். இத்தகைய முரண்பாடான புள்ளி விவரங்கள் மக்களை யோசிக்க வைக்கின்றன.

மக்களின் சந்தேகம் - பதில் கிடையாது

சென்னையை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பணம் மக்கள் நலனுக்காக செலவிடப்பட்டதா? அல்லது ஊழலில் விரிசல்கள் காணாமல் போய் விட்டதாக என்ற ஆழமான சந்தேகத்தை தட்டி எழுப்புகின்றன. மழை துயரங்களுக்கு கேடயமாக இருக்க வேண்டிய ஒன்று, நம்பிக்கைகளை உடைத்து அடையாளமாக நிற்கிறது.

புயல்களின் பெயர்கள் தான் மாறுகிறது என்றால், திமுக தலைவர்களின் புள்ளி விவரங்களும் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன. “95% முடிந்தது,” “97% முடிந்தது,” “98% முடிந்தது”. கணக்கு கூடுகிறது. ஆனால், வெள்ளம் வழக்கம் போல நிற்கிறது.

சென்னை நிலை - மாறவே மாறாதா?

புள்ளி விவரங்களை வழங்குவதிலும், கதைகளை மாற்றுவதிலும், முன்னேற்றம் என்று பெருமைப்படுவதிலும் காட்டும் அக்கறையை விடுத்து, திறமையாக நிர்வாகம் நடத்தினால், தலைநகரம் ஒவ்வொரு கனமழைக்கு இடிந்து போய் நிற்காது. சென்னையில் மீண்டும் மீண்டும் வெள்ளம்,

திமுக தலைவர்கள் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார்கள், இதற்கு எப்போது தீர்வு, இதுதான் மாநகர மக்களின் மில்லியன் டாலர் கேள்வி

=====================