Chief Minister Joseph Vijay extends greetings on World Chess Day. He expresses pride in Tamil Nadu's achievement of producing a large number of young Grandmasters.
உலக சதுரங்க நாளை முன்னிட்டு, சதுரங்க விளையாட்டை நேசிக்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சதுரங்கத்தின் தலைநகராக உயரும் தமிழ்நாடு
எக்ஸ் தளப் பதிவில் முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது,
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக முதலமைச்சர் தனது பதிவில் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
வரலாற்று சாதனையாளர்கள்
மேலும் 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான திரு. விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
அரசின் முழு ஆதரவு
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராகத் தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து சர்வதேச போட்டிகளில் முத்திரை பதிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் வாக்குறுதி
இத்தகைய முயற்சிகளுக்குத் தமிழக அரசு அனைத்து வகையிலும் துணை நின்று தேவையான எல்லா உதவிகளையும் வழங்கும் என்றும் முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
=====