சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து விரிவாக பேசினார்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை குறிப்பிட்டு, அமலாக்கத்துறை (ED) அறிக்கையில் இடம்பெற்ற தகவல்களை மேற்கோள் காட்டி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தனது உரையின்போது, டாஸ்மாக் ஒப்பந்தங்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக ‘ரதிஷ்’ என்ற நபரின் பெயரை குறிப்பிட்ட முதல்வர் விஜய், “ரதிஷ் யார்? அவருக்கும் திமுக நிர்வாகத்திற்கும் என்ன தொடர்பு?” என்ற கேள்வியை பேரவையில் எழுப்பினார்.
இந்த கேள்வி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர் விஜய், அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையின் விவரங்களை சுட்டிக்காட்டி, டாஸ்மாக் ஒப்பந்தங்கள் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் கட்சி நிதியாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக பல பெயர்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்தார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பதாக கூறியிருந்த முதல்வர் விஜய், தனது பதிலுரையின் போது பேரவையை விட்டு யாரும் வெளியேறக் கூடாது என கூறியிருந்தார்.
பின்னர் நடைபெற்ற விவாதத்தில் ஆளும்-எதிர்க்கட்சி இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
அரசியல் விமர்சனங்கள், டாஸ்மாக் விவகாரம், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் என பல்வேறு அம்சங்களை தொட்ட முதல்வர் விஜயின் பதிலுரை, சட்டப்பேரவையின் முக்கிய விவாதமாக மாறியது.
குறிப்பாக செந்தில் பாலாஜி மற்றும் ரதிஷ் தொடர்பான குறிப்புகள் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.
============