Ditwah Cyclone Update formed in Bay of Bengal, is moving towards northern Tamil Nadu and Andhra Pradesh Weather News in Tamil Google
தமிழ்நாடு

உருவானது டிட்வா புயல், வட தமிழகம் நோக்கி நகர்வு: 29,30ல் அதி கனமழை

IMD Alert on Ditwah Cyclone Update in Tamil Nadu : வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.

Kannan

தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

IMD Alert on Ditwah Cyclone Update in Tamil Nadu : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இலங்கை அம்பாந்தோட்டையிலிருந்து, கிழக்கு-வடகிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.

வங்கக் கடலில் டிட்வா புயல்

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, டிட்வா புயலாக(Ditwah Cyclone Update in Tamil) உருவாகி இருக்கிறது. வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

வட தமிழகம் நோக்கி புயல்

சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டிருக்கிறது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகரும் புயல், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி 48 மணி நேரத்தில் நெருங்கி வரும். அடுத்தடுத்த நகர்வுகளை பொருத்தே, டிட்வா புயல் எங்கு கரையை கடக்க போகிறது என்பதை வானிலை மையம் கணித்து கூறும்.

இன்று மிதமான மழை

புயல் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளை கனமழைக்கு வாய்ப்பு

தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்

29ம் தேதி அதி கனமழை வாய்ப்பு

வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 29ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்” இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

================