Evidence of DMK's corruption will be released at the right time: CM Vijay's bold statement in the Assembly!
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஆதாரங்கள் தேவையான நேரத்தில் வெளியிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் காரசார விவாதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசிக் கொண்டிருந்தபோது, தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்வி
விவாதத்தின் போது திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கிறதா என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கேள்வி எழுப்பினர்.
ஆதாரங்கள் குறித்து முதல்வர் விஜய்
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், மூன்று துறைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான கோப்புகள் எனது மேஜையில் இருப்பதாக நிதியமைச்சர் கூறியதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும் அனைத்து ஊழல்களுக்கும் போதிய ஆதாரங்கள் உள்ளன என்றும், எப்போது திறக்க வேண்டுமோ அதை அப்போது கோப்புகளைத் திறப்போம் என்றும் எச்சரித்தார்.
மக்களின் அன்பும் இடைத்தேர்தலும்
மக்களிடம் எப்போது, என்ன, எப்படிப் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்பதால் தான் அன்புடன் மக்கள் என்னை இங்கே உட்கார வைத்துள்ளதாகக் கூறிய முதல்வர் விஜய் , இடைத்தேர்தலில் ஆவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும். அதற்காகத்தான் பேசாமல் இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐ. பெரியசாமி மறுமொழி
இதனைத் தொடர்ந்து பேசிய ஐ. பெரியசாமி, மக்கள் அன்போடு பேசியே ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், இருமுறை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு : முதல்வர் விஜய் அறிவிப்பு : லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு, உற்பத்தியாளர்கள் வரவேற்பு..!