இலவச வேட்டி சேலை, ரூ.300 கோடி ஒதுக்கீடு
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இலவச வேட்டி சேலை திட்டம் தவெக ஆட்சியில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது , பொங்க்ல பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்கப்படவுள்ளதாக கைத்தறித் துறை தெரிவித்துள்ளது.
தவெக அரசும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இலவச வேட்டி-சேலை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் இந்தத் திட்டத்தை தொடரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
கைத்தறி துறை வெளியிட்டுள்ள அரசு குறிப்பில்
இது குறித்து கைத்தறி துறை வெளியிட்டுள்ள அரசு குறிப்பில்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க அரசு உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்தாண்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ.566.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழாண்டில் பயனாளிகளைக் கணக்கீடு செய்வதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு செய்தபோது 2 கோடியே 27 லட்சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்சத்து 14,094 வேட்டிகளும் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
அதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், கடந்த 3 ஆண்டுகளைப் போலவே சுமார் 177.64 லட்சம் சேலைகள், 177.22 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், கூடுதலாக தேவைப்படும் வேட்டி, சேலைகள் பின்னர் உற்பத்தி செய்யப்படும்
காப்பர் நிற ஜரிகை பார்டருடன் புதிய சேலை
நடப்பாண்டில் கூடுதல் தரத்துடன் புதிய ரக நூலில் வேட்டிகள், சேலைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. சேலைகளில் சில்வர் அல்லது காப்பர் நிற ஜரிகை பார்டரும், வேட்டிகளில். காப்பர் நிற ஜரிகை பார்டருடன் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கைத்தறி சங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும்
கைத்தறி சங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகதாகவும்
இதற்கான கொள்முதல் மற்றும் உற்பத்தி மதிப்பீடு ரூ.642.88 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும். மீதமுள்ள தொகை அடுத்து விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக ரூ.606.94 கோடி ஒதுக்கப்பட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது
=================