Free Dhoti and Saree Scheme for Pongal: Rs. 300 crore allocated; DMK scheme continuesTamil Nadu Government announces.  google
தமிழ்நாடு

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை திட்டம் : ரூ.300 கோடி ஒதுக்கீடு : திமுகவின் திட்டம் தொடர்கிறது, தமிழக அரசு அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலையை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது

Rohini

இலவச வேட்டி சேலை, ரூ.300 கோடி ஒதுக்கீடு

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இலவச வேட்டி சேலை திட்டம் தவெக ஆட்சியில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது , பொங்க்ல பண்​டிகைக்கு ரேஷன் அட்​டை​தா​ரர்​களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்​கப்​பட​வுள்​ள​தாக கைத்​தறித் துறை தெரி​வித்​துள்​ளது.

தவெக அரசும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்

தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் இலவச வேட்​டி-சேலை தமிழக அரசால் வழங்​கப்​பட்டு வரு​கிறது. புதி​தாக ஆட்​சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் இந்​தத் திட்​டத்தை தொடர​வுள்​ள​தாக தற்​போது அறி​வித்​துள்​ளது.

கைத்தறி துறை வெளியிட்டுள்ள அரசு குறிப்பில்

இது குறித்து கைத்தறி துறை வெளியிட்டுள்ள அரசு குறிப்பில்​டி-சேலைகள் வழங்​கும் திட்​டத்தை தொடர்ந்து முன்​னெடுக்க அரசு உயர்​நிலைக் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது. கடந்​தாண்​டில் இந்​தத் திட்​டத்​துக்​காக ரூ.566.26 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது.

தொடர்ந்து நிகழாண்​டில் பயனாளி​களைக் கணக்​கீடு செய்​வதற்​காக மாவட்ட வாரி​யாக ஆய்வு செய்​த​போது 2 கோடியே 27 லட்​சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்​சத்து 14,094 வேட்​டிகளும் கொள்​முதல் செய்ய வேண்​டிய தேவை உள்​ளது.

அதற்​கான கால அவகாசம் குறை​வாக இருப்​ப​தால், கடந்த 3 ஆண்​டு​களைப் போலவே சுமார் 177.64 லட்​சம் சேலைகள், 177.22 லட்​சம் வேட்​டிகள் உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ளதாகவும் மேலும், கூடு​தலாக தேவைப்​படும் வேட்​டி, சேலைகள் பின்​னர் உற்​பத்தி செய்​யப்​படும்

காப்​பர் நிற ஜரிகை பார்டருடன் புதிய சேலை

நடப்​பாண்​டில் கூடு​தல் தரத்​துடன் புதிய ரக நூலில் வேட்​டிகள், சேலைகள் உற்​பத்தி செய்​யப்​பட​வுள்​ளன. சேலைகளில் சில்​வர் அல்​லது காப்​பர் நிற ஜரிகை பார்​டரும், வேட்​டிகளில். காப்​பர் நிற ஜரிகை பார்டருடன் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கைத்தறி சங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும்

கைத்தறி சங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் ​றும் விசைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களுக்கு ஆண்டு முழு​வதும் தொடர்ந்து வேலை​வாய்ப்பு கிடைக்​கும் வகை​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளதாகதாகவும்

இதற்​கான கொள்​முதல் மற்​றும் உற்​பத்தி மதிப்​பீடு ரூ.642.88 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும். மீத​முள்ள தொகை அடுத்து விடுவிக்​கப்​படும் என்று தெரிவித்துள்ளது கடந்த பட்​ஜெட்​டில் இந்த திட்​டத்​துக்​காக ரூ.606.94 கோடி ஒதுக்​கப்​பட்​டிருந்த்து குறிப்பிடத்தக்கது

=================