"I view the arrest as a farce": Udhayanidhi Stalin on the police action! google,ai
தமிழ்நாடு

"கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்": காவல்துறையினரின் கைது குறித்து உதயநிதி ஸ்டாலின் !

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தன் மீதான நடவடிக்கையைத் திசைதிருப்பல் அரசியல் என விமர்சித்துள்ளார்.

Kavitha prasanna

"I view the arrest as a farce": Udhayanidhi Stalin on the police action!

”கைது நடவடிக்கைக்கு பயந்தவன் நான் அல்ல” தன் மீதான கைது நடவடிக்கையை காமெடியாகப் பார்ப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வழக்குப் பதிவும் காவல்துறையின் நகர்வும்

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

இதையடுத்து, தவெக மகளிரணியினர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த தஞ்சாவூர் காவல்துறையினர், சென்னை காவல்துறையினருடன் இணைந்து அவரைக் கைது செய்ய சென்றனர்.

நீதிமன்ற உத்தரவும் தஞ்சைக்கு அழைப்பும்

உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

இருப்பினும், விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை கைது செய்த காவல்துறையினர், அவரைப் போலீஸ் வாகனம் மூலம் தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர்.

செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியது

காவல்துறை வாகனத்தில் ஏறிய போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் "என் மீதான கைது நடவடிக்கையை ஒரு காமெடியாகவே பார்க்கிறேன். நான் பேசாத விஷயங்களை எடிட் செய்து செய்தியாக பரப்பி வருகிறார்கள்.

'டம்மி முதலமைச்சர்', அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ரீல்ஸ் மோகத்தில் செயல்படுவதைப் பற்றி மட்டுமே நான் ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். ஏதேனும் மக்கள் பிரச்சனை எழும்போதெல்லாம், அதை திசைதிருப்பவே தவெக அரசு முயல்கிறது" என்று தெரிவித்தார்.

=====