Job Opportunity at the Chengalpattu District Rural Livelihood Mission: Priority for Women Only! Ai generated
தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு : பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை!

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வள பயிற்றுநர் பணிகளுக்குத் தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 29.06.2026.

Kavitha prasanna

Job Opportunity at the Chengalpattu District Rural Livelihood Mission: Priority for Women Only!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு வள பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முற்றிலும் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி வாரியான காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி மற்றும் சம்பள விவரங்கள் பின்வருமாறு.

1. மாநில வள பயிற்றுநர்

  • காலிப்பணியிடம்: 1

  • மாதச் சம்பளம்: ரூ. 25,000

  • கல்வி மற்றும் அனுபவம்: சமூக அறிவியல், சமூகக் கல்வி அல்லது ஊரக வளர்ச்சி போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சுய உதவிக்குழுக்களில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

  • வயது வரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. மாவட்ட வள பயிற்றுநர் (DRP)

  • காலிப்பணியிடம்: 1

  • மாதச் சம்பளம்: ரூ. 18,000

  • கல்வி மற்றும் அனுபவம்: ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சுய உதவிக்குழுவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

  • வயது வரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. வட்டார வள பயிற்றுநர்

  • காலிப்பணியிடங்கள்: 8

  • மாதச் சம்பளம்: ரூ. 10,500

  • கல்வி மற்றும் அனுபவம்: ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்புடன், சுய உதவிக்குழுவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • வயது வரம்பு: 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

  • தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் www.tncdw.org என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான அனைத்து கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

2-வது தளம், A பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

செங்கல்பட்டு மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் போய்சேர வேண்டிய இறுதி நாள்: 29.06.2026

=====