கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் , பணி நியமன ஆணை ரத்து
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த நியமனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-ஆவது பிரிவுகளுக்கு நேரடியாக முரணானவை என்றும்,
இந்தச் சம்பவத்திற்காக கருணை அடிப்படையிலான நியமனங்கள் வழங்கப்பட்டால், இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் இதேபோன்ற வேலைவாய்ப்பை கோரி முன்வர வழிவகுக்கும் என்று நீதிபதிகள் கூறி அராசணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்
ரத்து ஆணை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்தது பணி ஆணை வழங்கியுள்ள நிலையில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நியமனம் ரத்து நீதிபதிகள் கூறிய தீர்ப்பு என்ன
பணி நியமன ஆணை ,ஒரு தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தும். போட்டித் தேர்வு, தகுதி அடிப்படையில் மட்டுமே அரசுப் பணி வழங்க வேண்டும்.எனவும் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்ற நிலையில் ,அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு, பகலாக தயாராகி வருகின்றனர்.
அப்படி இருக்க, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது சட்ட விரோதம்.கருணை அடிப்படையில் பணி எப்படி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதை பின்பற்றாமல் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிய பிறகும், அரசுப் பணி வழங்க வேண்டிய அவசியம் என்ன?.ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதாக அரசுத் தரப்பு கூறுகிறது. அந்த சம்பவங்களுடன் கரூர் சம்பவத்தை ஒப்பிட முடியாது என்று தெரிவித்து பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்
துயரச் சம்பவத்தின் பிண்ணனி என்ன
2025 செப்டம்பர் 27 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.இந்த கருர் சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது
அதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.பின்னர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூரி இழப்ப்பீடு தொகையுன் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற் பிறகு கரூர் மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டடு அதன்படி , ஜூலை மாதம் 10-ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
================================