சட்டமன்றப் பேச்சு மற்றும் சர்ச்சை
கடந்த செப்டம்பர் 7 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய்யின் உடல்மொழி பெரும் விவாதப் பொருளாக மாறியது.
மிசா குறித்த முதல்வரின் பேச்சு
குறிப்பாக, அவசரநிலைக் காலத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுபவித்த நிகழ்வுகள் குறித்துப் பேசும்போது, முதல்வர் காட்டிய உருவக் கேலி போன்ற உடல்மொழி பொறப்பற்ற செயல் என்றும், மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
முதல்வரின் விளக்கமும் கோரிக்கையும்
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் எக்ஸ் பதிவு
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் அமைதி
சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் காக்கவும், விவாதங்களை நாகரிகமாக எடுத்துச் செல்லவும் வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் விஜய் பதிவிட்டுள்ள இந்த விளக்கம் மற்றும் தெளிவுபடுத்தல் மூலமாகத் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : லண்டனில் ரேசர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம் : நேரில் பார்வையிடுகிறாரா முதல்வர் விஜய்?
=====