The deadline for LPG cylinder customers to complete e-KYC electronic verification has been extended until August 31.
ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்ட e-KYC
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களின் ‘இ-கேஒய்சி’ (e-KYC) மின்னணு சரிபார்ப்பை மேற்கொள்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனக்களின் அதிரடி நடவடிக்கை
போலியான எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், மானிய முறைகேடுகளைத் தடுக்கவும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இ-கேஒய்சி சரிபார்ப்பு ஏன் அவசியமானது தெரியுமா ?
மானியம் ரத்து?
நீங்கள் குறித்த அவகாசத்திற்குள் உங்கள் மின்னணு சரிபார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால், அரசு வழங்கும் மானியத் தொகை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும்.
முன்பதிவு முடக்கம்
புதிய சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது கணக்கு முடக்கப்பட்டதாகக் காண்பித்து, ஆர்டர் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யும் முறை
சமையல் எரிவாயு இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
அங்கு எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலி மூலமாக கைரேகை அல்லது பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்து உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இதுவரை நிறைவடைந்த இ-கேஒய்சி பணிகள்
தமிழகத்தில் இதுவரை 93 சதவீத வாடிக்கையாளர்கள் இ-கேஒய்சி பணிகளை நிறைவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆகஸ்ட் 16 மற்றும் 23-ஆக இருந்த அவகாசம் தற்போது ஆகஸ்ட் 31 வரை இறுதி வாய்ப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மகளிருக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவச பயணம் : முதல்வர் விஜய் அறிவிப்பு! : அக்.2 முதல் அமல்
=====